மின்சார கார்களை உற்பத்தி செய்வதில் முன்னனியில் உள்ள டெஸ்லா நிறுவனத்தின் தொழிற்சாலையில் இனப் பாகுபாடு காட்டப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த, நியாயமான வேலைவாய்ப்பு மற்றும் வீட்டுவசதித்துறை என்ற அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், டெஸ்லா நிறுவனத்தின் FREMONT என்ற தொழிற்சாலையில் இன ரீதியில் பிரிவினை காட்டப்படுவதற்கான ஆதாரத்தை கண்டறிந்துள்ளதாக தெரிவித்துள்ளது. கறுப்பினத்தவர் அல்லாத தொழிலாளர்களுக்கு ஆலையில் வேலை ஒதுக்கீடு, ஒழுக்கம், ஊதியம் மற்றும் பதவி உயர்வு ஆகிவயற்றில் அடிக்கடி முன்னுரிமை அளிக்கப்படுவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. தொழிற்சாலையில் உள்ள கறுப்பினத் தொழிலாளர்கள் தொடர்ந்து மிகவும் இன அவதூறுகளுக்கு ஆளாவதாகவும், இனவெறி நகைச்சுவைகளுக்கு உடப்டுத்தப்படுவதாகவும் கலிஃபோர்னியா அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கறுப்பின அல்லது ஆப்ரிக்க அமெரிக்கர்களுடன் ஒப்பிடும்போது, மற்ற தொழிலாளர்களுக்கு ஒழுங்கு நடவடிக்கையில் மென்மையான போக்கு கடைப்பிடிக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்தநிலையில், அனைத்து வகையான பாகுபாடுகளையும், துன்புறுத்தல்களையும் எதிர்ப்பாக டெஸ்லா நிறுவனம் விளக்கமளித்துள்ளது. மேலும், பாதுகாப்பான, மரியாதைக்குரிய, நியாயமான பணியை வழங்க உறுதிபூண்டுள்ளதாகவும் கூறியுள்ளது.
- பேரூராட்சி அலுவலகம் முன் வார்ட் உறுப்பினர் போராட்டம்நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த தேவர் சோலை பேரூராட்சி 13வது வர்ட் உறுப்பினர் கிரிஜா இவர் […]
- பதக்கங்களை கங்கையில் வீசி ஏறிந்த டெல்லியல் போராடும் மல்யுத்த வீரர்கள்எங்கள் பதக்கங்களை இன்று மாலை 6 மணிக்கு ஹரித்வாரில் உள்ள கங்கை நதியில் வீசுவோம் என்று […]
- சிஎஸ்கே வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு5வது முறையாக கோப்பையை வென்று சென்னை வந்தடைந்த சிஎஸ்கே வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.ஐபிஎல் தொடரில் […]
- சிஎஸ்கே வெற்றிக்கு பாஜக தொண்டரே காரணம் – அண்ணாமலைகுஜராத் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் கடைசி இரண்டு பந்துகளில் 10 ரன்கள் அடித்த ஜடேஜா […]
- ரூ.128 கோடியில் தொழிற்சாலை.. ஜப்பான் நிறுவனத்துடன் மேலும் ஒரு ஒப்பந்தம்தமிழ்நாட்டில் ரத்த அழுத்த மானிட்டர்களுக்கான உற்பத்தி தொழிற்சாலை நிறுவிட ஒப்பந்தம் முதல்வர் முன்னிலையில் இன்று ஒப்பந்தம் […]
- அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த பேரணி.., பள்ளிக்கல்வித்துறை உத்தரவு..!அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த பேரணி நடத்த வேண்டும் என தமிழக பள்ளக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.அரசு […]
- நரிக்குறவர்கள் சாதிச் சான்றிதழ் பெற வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..!நரிக்குறவர்கள் எஸ்.டி சான்றிதழ் பெற வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.இது தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் […]
- மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கக் கூடாது..,மாற்றுத்திறனாளிகள் ஆணையர் கடிதம்..!பல்வேறு அலுவல் காரணமாக மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்திற்கு வருகை தரும் மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கும் வகையில் நடந்து […]
- பராமரிப்பு பணிகளுக்காக இன்று ஒருநாள் மூடப்படும் ஈஷா யோகா மையம்..!ஆண்டுதோறும் மே 30ஆம் தேதியன்று நடைபெறும் பராமரிப்பு பணிகளுக்காக கோவையில் ஈஷா யோகா மையம் மூடப்படுவதாக […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 177: பரந்து படு கூர் எரி கானம் நைப்பமரம் தீயுற்ற மகிழ் தலைஅம் […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் ஒளிந்திருக்கும் திறமை..!! ஒரு புகைவண்டி நிலையத்தில் பிச்சைக்காரன் ஒருவன் தனது கைப்பை நிறைய பென்சில்களை […]
- பொது அறிவு வினா விடைகள்
- இன்று அணுக்கரு ஆய்வின் ராணி சியான்-ஷீங் வு பிறந்த தினம்யுரேனியம் அணுவிலிருந்து ஐசோடோப்புகளை வாயுப்பரவல் முறையில் பிரித்தெடுத்த அணுக்கரு ஆய்வின் ராணி, நோபல் பரிசு பெற்ற […]
- டிஎன்பிஎல் நிறுவனத்தில் இரண்டாண்டு பயிற்சி வகுப்பு..!டிஎன்பிஎல் நிறுவனத்தில் இரண்டாண்டு பயிற்சி வகுப்பில் சேர ஜூன் 9 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் […]
- குறள் 444தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்வன்மையு ளெல்லாந் தலை.பொருள் (மு.வ): தம்மைவிட (அறிவு முதலியவற்றால்) பெரியவர் தமக்குச் […]