• Mon. Jul 20th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

கள்ளக்குறிச்சியில் ₹15,000 லஞ்சம் பெற்ற மின் வாரிய வணிக உதவியாளர் கைது

Byதரணி

Aug 9, 2024

கள்ளக்குறிச்சி மாவட்ட கச்சிராயபாளையம் அம்மாபேட்டையை சேர்ந்த ஷியாம் பிரபாகர் என்பவருக்கு மின் இணைப்பு வழங்க, கச்சராபாளையம் இளமின் பொறியாளர் அலுவலகத்தில் வணிக உதவியாளர் ஆக பணிபுரியும் வெங்கடாசலம் என்பவர் லஞ்சமாக ₹15,000/- வாங்கியதை கள்ளக்குறிச்சி மாவட்ட இலஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி சத்தியராஜ் மற்றும் காவல் ஆய்வாளர் அருண்ராஜ் ஆகியோர் தலைமையிலான காவல் குழுவினர் அவரை கையும் களவுமாக பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.