தேனி அருகே உள்ள வீரபாண்டி கௌமாரியம்மன் திருக்கோயில் சித்திரைத் திருவிழா கடந்த செவ்வாயன்று தொடங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது.
இந்த திருவிழாவை காண தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை மகிழ்விப்பதற்காக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விளையாடும் வகையில் சுமார் 28 வகையான ராட்டினங்கள் அமைக்கப்பட்டுள்ளன.


இந்த நிலையில் ராட்டினத்தில் உதவியாளராக தினக்கூலி வேலை பார்த்து வந்த வீரபாண்டியை அடுத்துள்ள உப்பார்பட்டியைச் சேர்ந்த முத்துக்குமார்(32) என்ற இளைஞரின் மீது நேற்று மின்சாரம் பாய்ந்ததில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனை அடுத்து அனைத்து ராட்டினங்களையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்க தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்கரே உத்தரவிட்டார்.
இந்த நிலையில் இன்று திண்டுக்கல் மின்வாரிய ஆய்வாளர் பாலமுருகன் மற்றும் உதவி ஆய்வாளர் ராஜேஸ்வரி தலைமையிலான மின் வாரியத்தினர் .

இன்று ராட்டினத்தில் அமைக்கப்பட்டுள்ள மின் இணைப்புகள் மற்றும் மின் விளக்குகளுக்கு கொடுக்கப்பட்டுள்ள மின் இணைப்புகள் குறித்து முழுமையாக ஆய்வு நடத்தினார்கள்.
மேலும் ராட்டினத்தின் அருகே அமைக்கப்பட்டிருந்த அனைத்து உயர் கோபுர மின் விளக்குகளையும் ராட்டினத்தில் இருந்து குறிப்பிட்ட இடைவெளியை நோக்கி மாற்றி அமைக்க உத்தரவிட்டனர்.
மின்வாரியத்தினரின் ஆய்வுகளின் முடிவில் அவர்கள் அளிக்கும் அறிக்கையைத் தொடர்ந்து தொடர்ந்து ராட்டினங்கள் இயக்க அனுமதி அளிக்கப்படுமா? அல்லது ராட்டினங்கள் இயக்குவதற்கான தடை நீடிக்குமா? என்பது தெரியவரும்.
ஆற்றில் நீராடி சுவாமியை தரிசித்து சில மணி நேரங்கள் பொழுதுபோக்காக திருவிழாவில் கலந்துகொண்டு செல்லலாம் என்று இருந்த பக்தர்களுக்கு ராட்டினங்கள்
நிறுத்தப்பட்டது, ஒருபுறம் வேதனையாக இருந்தாலும், மறுபுறம் மீண்டும் ஏதாவது ஆபத்து நேருமோ என்று பயமும் கலந்து இருப்பதால் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது.

- 79,000 மாணவ,மாணவிகளுக்கு பணி நியமன ஆணைகள்முதலமைச்சர்உத்தரவின் கீழ் தமிழகம் முழுவதும் அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் நடைபெற்று வரும் தனியார் துறையின் […]
- சொதி:தேவையானவை: பாசிப்பருப்பு – 200 கிராம், உருளைக்கிழங்கு, சின்ன வெங்காயம் – தலா 200 கிராம், […]
- புத்துணர்வு தரும் ஏற்காடு கோடை விழா…கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்த ஏற்காடு கோடைவிழா மே 25 தொடங்கி ஜூன் 1 […]
- சசிகலாவுடன்- நடிகை விஜயசாந்தி ரகசிய சந்திப்புநடிகையும்,பாஜக முன்னாள் எம்.பியுமான விஜயசாந்தி -சசிகலாவை ரகசியமாக சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.அ.தி.மு.க.க்கு தான் தலைமை […]
- சிந்தனைத் துளிகள்• வாழ்க்கை ஒரு சங்கீதம். அது செவிகளாலும், புலன்களாலும், உணர்வுகளாலும் உருவாக்கப்பட வேண்டுமே அல்லாமல் சட்ட […]
- அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும்பத்திரிகையாளர்களிடம் தொடர்ந்து அநாகரிகமாக நடந்து கொள்வதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு பல்வேறு அமைப்பினர் கண்டனம் […]
- பாமக தலைவராக அறிவிக்கப்படுகிறார் அன்புமணிசென்னை அடுத்த திருவேற்காட்டில் இன்று நடக்கும் பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவராக அன்புமணி […]
- குரங்கு காய்ச்சல் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தும்…லண்டன், இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுக்கல், கனடா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட 20 நாடுகளில் ஏறத்தாழ 200 […]
- வெளியானது நயன்தாரா -விக்னேஷ் சிவன் திருமணத் தேதி…நயன்தாரா -விக்னேஷ் சிவன் திருமணம் எப்போது நடைபெறும் என்று ரசிகர்கள் அனைவரும் நீண்ட நாட்களாக எதிர்பார்ப்பில் […]
- அனைத்து கிறிஸ்துவ மக்கள் களம் சார்பில் ஆர்ப்பாட்டம்சிறுபான்மை மக்கள் நல கட்சி அனைத்து கிறிஸ்துவ மக்கள் களம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி […]
- ஹெல்மெட் அணிந்துவரும் வாகன ஓட்டிகளுக்கு பரிசுதலைக்கவசத்தின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் ஹெல்மெட் அணிந்து வரும் வாகன ஒட்டிகளுக்கு தொப்பி, கூல்டிரிங்க்ஸ் வழங்கிய […]
- புதுமண்டபத்தில் உள்ள கடைகளை அப்புறப்படுத்தும் கோயில் ஊழியர்கள்மதுரை புது மண்டபத்தில் உள்ள கடைகளில் பொருட்களை காவல்துறை பாதுகாப்புடன் அப்புறப்படுத்தும் கோயில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.உலகப் […]
- மதுரை – தேனி விரைவு ரயிலுக்கு அமோக வரவேற்பு- கூடுதல் ரயில்களை இயக்க கோரிக்கைமதுரை தேனி விரைவு சிறப்பு ரயிலில் நேற்று முதல் இயக்கப்பட்டதில் 574 பேர் பயணம் கொண்டதில் […]
- காட்டுயானை தாக்கி டீக்கடைக்காரர் பலி!கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி ஆரோட்டுப்பாறை திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் தருமலிங்கம். இவரது மகன் ஆனந்தகுமார்(வயது […]
- இன்று கருணாநிதி சிலையை-வெங்கையாநாயுடு திறந்து வைக்கிறார்சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை இன்று திறப்புசென்னை ஓமந்தூரார் அரசினர் […]