நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம், ஜனவரி 19-ஆம் தேதி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளது.
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம், ஜனவரி 19-ஆம் தேதி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளது. விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படவுள்ள நிலையில், இந்த ஆலோசனை நடைபெறவுள்ளது.
இந்த ஆலோசனை கூட்டத்தில், 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்துவது குறித்தும், இந்த தேர்தலை சுமுகமாக நடத்துவது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்படவுள்ளது.