மதுரை பைபாஸ் சாலை பொன்மேனி பேருந்து நிறுத்தம் அருகே மதுரை சிந்தாமணியை சேர்ந்த பாலசுப்பிரமணியம் வயது 65 இவர் இருசக்கர வாகனத்தில் காளவாசல் பகுதியில் இருந்து பழங்காநத்தம் நோக்கி பைபாஸ் சாலையில் வந்து கொண்டிருந்த பொழுது இவர் பின்னால் வந்த ஆந்திர மாநில பதிவு எண் கொண்ட லாரி அவர் மீது மோதியது.

மோதிய வேகத்தில் அவர் சம்பவ இடத்திலேயே சக்கரம் ஏறி இறங்கியது பலியானார் சம்பவம் குறித்து தகவல் அறிந்த திடீர் நகர் போக்குவரத்து புலனாய்வு போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு லாரி டிரைவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.





