• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

பழனியில் செயல்பட்டு வரும் தனியார் தங்கும் விடுதிகளுக்கு டிஎஸ்பி எச்சரிக்கை விடுத்துள்ளார்

ByTBR .

May 7, 2024

திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர் மற்றும் அடிவாரம் பகுதிகளில் விபச்சார வழக்கில் ஐந்து பெண்கள் கைது செய்யப்பட்டனர் இந்த நிலையில் தனியார் தங்கும் விடுதியில் விபச்சாரம் நடத்தினாலோ அல்லது வெளியூரிலிருந்து பெண்களை அழைத்து வந்து விபச்சாரம் நடத்தினாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பழனி துணை காவல் கண்காணிப்பாளர் தனம் ஜெயம் எச்சரிக்கை வைத்துள்ளார் தொடர்ச்சியாக விபச்சாரம் நடைபெற்று வருவதாக தகவல் வந்தால் நகராட்சியின் மூலம் தனியார் தங்கும் விடுதிக்கு சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் தனியார் தங்கும் விடுதிகளை கண்காணிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.