தமிழக நிதித்துறை அமைச்சராக பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நியமிக்கப்படுவதற்கு முன்னே பெரிதும் பேசப்பட்டவர். தமிழ்நாடு மட்டுமல்லாமல் தேசிய ஊடகங்களாலும் கொண்டாடப்பட்டவர். சுமார் ரூ.5 லட்சம் கோடியை கிட்டத்தட்ட எட்டி கடனில் சிக்கி தமிழகம் தவித்து வரும் நிலையில், சர்வதேச அளவில் அந்த துறை குறித்த அனுபவம் உள்ள மிகப் பொருத்தமான நபரான பிடிஆரை தேர்வு செய்ததற்கு முதல்வர் ஸ்டாலினுக்கும் பாராட்டுகள் குவிந்தன.
பிடிஆர் சார்ந்த நிதித்துறை ரீதியான செயல்பாட்டில் அவர் எந்தவித விமர்சனங்களும் இதுவரை எழவில்லை என்றாலும் கூட, தொடர்ந்து விமர்சனங்களுக்கு மத்தியிலேயே அவர் பயணித்து வருகிறார். தன்னை பற்றி வரும் எந்த ஒரு விமர்சனத்துக்கும் உடனடியாக எதிர்வினையாற்றுவதும், அதற்கு அவர் பயன்படுத்தும் வார்த்தைகளும் தியாகராஜன் கொஞ்சம் ஓவராகவே பேசுகிறார் என்ற பிம்பத்தை உருவாக்குவதாக கூறுகிறார்கள்.
அரசியலில் விமர்சனங்களைக் கவனித்துக் கடந்துவிட வேண்டுமே தவிர அவற்றிற்குப் பதில் சொல்லிக்கொண்டிருக்க வேண்டியதில்லை. அமைச்சர் பொறுப்பில் இருக்கும் பிடிஅர், தனது முன் கோபத்தையும் எல்லாவற்றிற்கும் பதில் சொல்ல வேண்டும் என்ற குணத்தையும் விட்டு விட வேண்டும் என்ற அறிவுறுத்தல்களும் அவருக்கு விடுக்கப்பட்டு வந்தன.
பிடிஆரின் இந்த பேச்சுகள் கட்சிக்கு உள்ளேயும், வெளியேயும் சலசலப்புகளை ஏற்படுத்திய நிலையில், அவரை அழைத்த ஸ்டாலின் துறைரீதியான செயல்பாடுகளில் மட்டுமே கவனம் செலுத்துங்கள்; உங்கள் அனுபவமும், திறமையும் முழுதாக வெளிப்பட்டு மாநிலத்தின் நிதி நிலைமை விரைவில் மாற வேண்டும் என்று அறிவுறுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகின. இதையடுத்து, அண்மைக்காலமாகவே பிடிஆர் சைலண்டாகவே இருக்கிறார்.
இதனிடையே, பிடிஆர் கட்சியில் வகித்து வந்த ஐடி விங் செயலாளர் பதவியை ராஜினாமா செய்து விட்டதாக தகவல் வெளியானது. எந்த அணிக்கும் ஆலோசகர் இல்லாத நிலையில், ஐடி விங்குக்கு ஆலோசகராக கவிஞர் மனுஷ்யபுத்திரனை கொண்டு வந்தது, மநீமவிலிருந்து வந்த மகேந்திரனை ஐடி விங் இணைச் செயலாளராக்கியது உள்ளிட்ட விவகாரங்களில் பிடிஆருக்கு ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அவர் ராஜினாமா செய்ததாக கூறப்பட்டது. ஆனாலும், அரசாங்க வேலைகளில் கவனம் செலுத்துவதற்காகவே தனது பதவியை பிடிஆர் ராஜினாமா செய்ததாக திமுக தரப்பில் தெரிவித்தனர்.
தொடர்ந்து திமுக ஐடி விங் செயலாளர் பதவியை கைபற்ற பலரும் முனைப்பு காட்டி வந்த நிலையில், திமுக தகவல் தொழில் நுட்ப அணி செயலாளராக மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டிஆர்பி ராஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ளார்.
அரசு பணிகளில் கவனம் செலுத்த வேண்டியுள்ளதால், ஐடி விங் செயலாளர் பதவியை ராஜினாமா செய்வதாக அவர் அளித்த கடிதத்தை ஏற்றுக் கொண்டு அவரை அப்பொறுப்பில் இருந்து விடுவித்து அவருக்கு பதிலாக மன்னார்குடி எம்.எல்.ஏ. டி.ஆர்.பி. ராஜா நியமனம் செய்யப்படுவதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, டிஆர்பி ராஜாவின் தந்தையும், திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவருமான டிஆர் பாலு, டிவி நிகழ்ச்சி ஒன்றில் தனி நபர் குறித்து பேசமுடியாது என பிடிஆரை நோஸ் கட் செய்யும் விதமாக பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- அடுத்த முதல்வர் உதயநிதி ஸ்டாலின்தான்- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேச்சு.ஸ்டாலினுக்கு பிறகு அடுத்த முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தான் என கே..கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் பேசியுள்ளார்.விருதுநகர் மாவட்டம் […]
- ஓலா, ஊபர் நிறுவனங்களுக்கு நோட்டீஸ்…ஓலா, ஊபர் நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பெருநகரங்களில் ஓலா, ஊபர் போன்ற வாகனங்கள் […]
- காங்கிரஸ் குறித்து பிரசாந்த் கிஷோர் பரபரப்பு டூவிட்குஜராத், இமாச்சல் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்திக்கும் பிரசாந்த் கிஷோர் பரபரப்பு தகவல்கடந்த சில தினங்களுக்கு […]
- ரெயில்வே ஊழியர்கள் தமிழ்மொழியை கற்றுக்கொள்ள வேண்டும்தமிழகத்தில் பணிபுரியும் ரெயில்வே ஊழியர்கள் தமிழ்மொழியை கற்றுக்கொள்ள வேண்டும்- என மத்திய ரெயில்வே அமைச்சர்அஸ்வினி வைஷ்ணவ் […]
- முப்பம்தரத்து இசக்கியம்மன் கோயில் கொடை விழாகழுகுமலையில் முப்பம்தரத்து இசக்கியம்மன் கோயில் கொடை விழாகொடியேற்றத்துடன் துவங்கியது .அதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.கழுகுமலை மேலக்கேட் […]
- இரு ரயில்வே சங்க நிர்வாகிகளுக்கிடையே அடிதடிமதுரையில் ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தில், இரு ரயில்வே சங்க நிர்வாகிகள் அடிதடி ஈடுபட்டதால் பரபரப்பு.’சதர்ன் […]
- மீண்டும் வருகிறாள் சந்திரமுகி… விரைவில்சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘சந்திரமுகி’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக கடந்த ஆண்டே […]
- காங்கிரஸ் கட்சிக்கு அவமானமாக இல்லையா…? குஷ்பு சாடல்இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை பேரறிவாளன் அனுபவித்து வந்தார். […]
- கள்ளச்சாரயத்தை ஒழிக்க வீதியில் இறங்கி போராடுவோம் – எடப்பாடிபழனிசாமிதமிழக அரசு கள்ளச்சாராயத்தை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி அறிக்கை […]
- வாட்ஸ்-அப் பயனாளிகளுக்கு விரைவில் புதிய வசதிவாட்ஸ் அப் இல்லைஎன்றால் உலகமே முடங்கிவிடும் அளவுக்கு அதன் பயன்பாடு அதிகரித்துவருகிறது.புகைப்படங்கள்,வீடியோக்கள்,வீடியோகாலில் பேச, என தனிப்பட்ட […]
- பல வெற்றிகளை குவித்த குத்துச்சண்டை வீரர், மரணத்திடம் தோல்வி..குத்துச்சண்டையில் இதுவரை தோல்வியை சந்திக்காத ஜெர்மனி வீரர் மூசா யாமக் போட்டிக்களத்திலேயே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த […]
- பாலியல் குற்றச்சாட்டு-எலான்மஸ்க் மறுப்புவிமான பணிப்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு தந்த எலான் மஸ்க் பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.உலகின் முதன்மை பணக்காரர்களுள் […]
- மொழியை வைத்து சர்ச்சை… பிரதமர் விமர்சனம்…இந்தியாவில் அண்மைக்காலமாக மொழியை வைத்து சர்ச்சையை கிளப்ப முயற்சி நடப்பதாக பிரதமர் மோடி விமர்சனம் செய்துள்ளார். […]
- முன்கூட்டியே துவங்குகிறது தென்மேற்கு பருவமழைதென்மேற்கு பருவமழை ஜூன் முதல் அல்லது 2 வாரத்தில் துவங்கும். ஆனால் இந்த ஆண்டு 10 […]
- திவாலான இலங்கை அரசு… இலங்கை மத்திய வங்கி அறிவிப்பு…இலங்கை அரசு திவால் ஆகிவிட்டதாக அந்த நாட்டின் மத்திய வங்கி பரபரப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. […]