• Sat. Apr 27th, 2024

நான் அரசியலுக்கு வந்திருப்பது காலத்தின் கட்டாயம் என தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன் பேச்சு…

ByG.Ranjan

Mar 28, 2024

சிவகாசியில் அதிமுக கூட்டணியிம் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரனை ஆதரித்து பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பேசிய தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன்..,

நான் அரசியலுக்கு வந்திருப்பது காலத்தை கட்டாயம் எனவும் அரசியலுக்கு வருவேன் என்பது தெரியும் ஆனால் இவ்வளவு விரைவில் அரசியலுக்கு வருவேன் என்பது தெரியவில்லை என்றார்.

விருதுநகர் என் பூர்வீக மண். விருதுநகரில் உள்ளவர்கள் என்னுடைய அங்காளி பங்காளிகள். கஷ்டத்தை சொல்லி சொல்லி என் தந்தை எங்களை வளர்த்துள்ளார். அதிமுகவினர் என்னை அன்போடு அரவணைத்து கொள்கிறார்கள். தேமுதிக அதிமுகவிற்கு எந்த வேறுபாடும் தெரியவில்லை. பட்டாசு தொழிலுக்காக நிச்சயமாக டெல்லியில் சென்று குரல் கொடுப்பேன் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *