ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கே.எல்.ராகுல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் என்று தினேஷ் கார்த்திக் எச்சரித்துள்ளார். முதல் 2 போட்டிகளில் விளையாடவில்லை என்றால் விளையாடும் லெவனில் நீடிப்பது கடினம் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது நேற்றுடன் முடிவுக்கு வந்தது. அதன்படி நடைபெற்ற முடிந்த இந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த டெஸ்ட் தொடருக்கு முன்பாக நடைபெற்ற ஒருநாள் தொடரின் போது காயமடைந்த ரோகித் சர்மா டெஸ்ட் அணியிலிருந்து வெளியேறியதால் அவருக்கு பதிலாக கே.எல் ராகுல் இந்த தொடரில் கேப்டனாக செயல்பட்டார். ஒரு கேப்டனாக இந்த டெஸ்ட் தொடரில் ராகுல் சிறப்பாக செயல்பட்டிருந்தாலும் ஒரு பேட்ஸ்மேனாக இந்த தொடரில் அவர் சோபிக்க தவறிவிட்டார். வங்கதேச அணிக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரில் மொத்தம் 57 ரன்களை மட்டுமே அவர் அடித்து ஏமாற்றத்தை அளித்துள்ளார்.
ஏற்கனவே நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை தொடரிலிருந்து பேட்டிங் ஃபார்மை இழந்து தவித்து வரும் அவரின் தொடர்ச்சியான செயல்பாடுகள் தற்போது அவரது இடத்தின் மீது பெரிய கேள்வியை எழுப்பி உள்ளன. ஏனெனில் அவருக்கு பதிலாக அணியில் இடம்பெற்று வரும் இளம் வீரர்கள் சிறப்பாக விளையாடி வரும் வேளையில் கே.எல் ராகுலின் இந்த தொடர் சொதப்பல் அனைவரது மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் வங்கதேச தொடரிலும் கே.எல் ராகுல் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளதால் அடுத்து வரும் ஆஸ்திரேலியா தொடர் அவருக்கு முக்கியமான தொடராக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ஆஸ்திரேலியா தொடருக்கு முன்னதாக இந்திய அணியின் முன்னணி கிரிக்கெட் வீரரான தினேஷ் கார்த்திக் கே.எல் ராகுலை எச்சரிக்கும் வகையில் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்:- பிப்ரவரி, மார்ச் மாதம் நடைபெற இருக்கும் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ராகுல் கண்டிப்பாக இடம் பிடிப்பார். ஆனால் அந்த தொடரின் முதல் இரண்டு
போட்டிகளில் அவர் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்றால் நிச்சயம் அவர் அணியிலிருந்து நீக்கப்படுவார் என்று வெளிப்படையாக தெரிவித்துள்ளார். இந்திய அணிக்காக 40 டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் விளையாடியுள்ள அவர் தனது சராசரியை 30-க்கு உள்ளே தான் வைத்திருக்கிறார். இப்படி 35 போட்டிகளுக்கு மேல் விளையாடிய ஒரு துவக்க வீரரின் சராசரி 30-க்கு கீழ் இருப்பது ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்று அல்ல. எனவே ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரில் அவர் சிறப்பாக செயல்பட்டாக வேண்டியது அவசியம். அந்த தொடரிலும் அவர் சொதப்பினால் நிச்சயம் அவரது இடம் சுப்மன் கில்லிடம் பறிபோக வாய்ப்புள்ளது என்று தினேஷ் கார்த்திக் அவரை எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- தமிழ்நாட்டு மாணவர்கள் விண்ணப்பிக்க முடியாதபடி தேர்வு படிவம்.., அஞ்சல் துறை செயலாளருக்கு சு. வெங்கடேசன் எம். பி கடிதம்!ஒன்றிய அரசுத் துறைகளின் பணி நியமனங்களில் எல்லாம் ஏதோ ஒரு வகையில் தமிழ் தேர்வர்கள் இன்னல்களுக்கு […]
- இராஜபாளையம் அருகே தளவாய்புரத்தில் தொடரும் விசைத்தறி தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்!ஒன்பதாவது நாளான இன்று கிராமநிர்வாக அலுவலகம் முன்பு கஞ்சித்தொட்டி திறந்து போராட்டத்தால் பரபரப்பு! விருதுநகர் மாவட்டம் […]
- ராஜபாளையத்தில் தோட்டக்கலைத் துறை சார்பில் விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் விநியோகம்!விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த 33 விவசாயிகளுக்கு தென்னையில் ஊடுபயிராக பயிரிடுவதற்கு ஏற்ற நாட்டு […]
- சிவகாசியில், தனியார் நிதி நிறுவன மேலாளருக்கு அரிவாள் வெட்டு…
2 மர்ம ஆசாமிகளுக்கு போலீஸ் வலைவீச்சு…..விருதுநகர் மாவட்டம் ஆமத்தூர் அருகேயுள்ள வெள்ளூர் பகுதியைச் சேர்ந்தவர் குருராஜ் (34). இவர் சிவகாசியில் உள்ள […] - தேர்தல் கால வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்பு…விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் வட்டார கல்வி அலுவலகம் முன் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் […]
- எம்.புதுப்பட்டி, ஸ்ரீகூடமுடைய அய்யனார் கோவில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்…..விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள எம்.புதுப்பட்டி பகுதியில், இந்து சமய அறநிலையத்துறையின் கீழுள்ள, பிரசித்திபெற்ற அருள்மிக […]
- சோழவந்தான் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழப்புமதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே ஆலங்கொட்டாரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பூச்சிப்பாண்டி வயசு 55 இவருக்கு திருமணம் […]
- கலெக்டர் அலுவலகம் முன்பு கணவன்- மனைவி தீக்குளிக்க முயற்சிசென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி நிலத்தை அளவிடு செய்ய இரண்டு லட்ச ரூபாய் லஞ்சம் கேட்கும் வட்டாட்சியர் […]
- ஐஸ்கிரீமில் தவளை விவகாரம்- உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வுதிருப்பரங்குன்றத்தில் ஐஸ்கிரீமில் உயிரிழந்த தவளை இருந்த விவகாரம்; கடையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வுக்காக மாதிரிகள் […]
- திருநகரில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்பாட்டம்மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா திருநகரில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து கண்டன […]
- தலைக்கூத்தல் – சினிமா விமர்சனம்‘இறுதிச் சுற்று’, ‘விக்ரம் வேதா’ உள்ளிட்ட வெற்றிப் படங்களை தயாரித்த ஒய் நாட் ஸ்டூடியோஸ் நிறுவனம் […]
- கொலை செய்யப்பட்ட ரவுடியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்புகாவல்துறையினரின்நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பின்னர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட ரவுடியின் உடல் அவரது மனைவி […]
- மத்திய பாஜக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்எல் ஐ சி ,எஸ் பி ஐ நிறுவனங்களில் கடன் வாங்கி மோசடி செய்த அதானி […]
- மதுரை வழியாக செல்லும் ரெயில்களின் போக்குவரத்து மாற்றம்..!!மதுரை, விருதுநகரில் இரட்டை ரெயில்வே பாதை இணைப்பு மற்றும் தண்டவாள பராமரிப்பு பணி நடந்து வருகிறது. […]
- சென்னை ஐகோர்ட்டுக்கு 5 புதிய நீதிபதிகள்- ஜனாதிபதி உத்தரவுசென்னை உயர் நீதிமன்றத்திற்கு 5 பேரை கூடுதல் நீதிபதிகளாக நியமித்து ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். கடந்த 17-ந் […]