நடிகை கடத்தப்பட்ட விவகாரத்தில் நடிகர் திலீப்பிற்கு எதிராக தொடரப்பட்ட அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் அவருக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது கேரள உயர்நீதிமன்றம்.
2017 ம் ஆண்டு நடிகை காரில் கடத்தப்பட்டு, துன்புறுத்தப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கில் மலையாள நடிகர் திலீப் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர். பிறகு திலீப் ஜாமினில் வெளிவந்தார். தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வந்தது. பிறகு இந்த வழக்கு சிபிஐ.,க்கு மாற்றப்பட்டது.
நடிகை கடத்தப்பட்ட வழக்கில் விசாரணை அதிகாரிகளுக்கு திலீப், கொலை மிரட்டல் விடுத்ததால் சிபிஐ தரப்பில் மற்றொரு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு சமீபத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, திலீப்குமார் பயன்படுத்திய 6 மொபைல் போன்களை ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. ஆனால் மொபைல் போன்களை ஒப்படைக்க திலீப் மறுத்து வந்தார். ஆனால் திலீப் கோர்ட்டில் மொபைல் போன்களை ஒப்படைக்க வேண்டும் என கேரள கோர்ட் உத்தரவிட்டது.
இதற்கிடையில் கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் திலீப் தரப்பில் ஜாமின் கேட்கப்பட்டது. ஆனால் போலீசார் தரப்பில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சாட்சிகளை அழிக்க முயற்சி செய்வார்கள் என கூறி போலீசார் ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். முன் ஜாமின் கேட்ட வழக்கை இன்று விசாரித்த நீதிபதி கோபிநாத், தான் நிபந்தனை விதித்துள்ளதாகவும், அதை மீறினால் ஜாமினை ரத்து செய்து விட்டு, அவரை கைது செய்யலாம் என கூறி ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.
நடிகர் திலீப் தரப்பில் வாதிட்ட போது தாங்கள் போலீசாரின் 33 மணி நேர விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கியதாகவும், 3 நாட்கள் தொடர்ந்து 11 மணி நேர விசாரணைக்கும் முழு ஒத்துழைப்பு வழங்கி உள்ளதாகவும் கூறினார். திலீப் தரப்பின் இந்த வாதத்தை ஏற்றுக் கொண்டு, அவருக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டார் நீதிபதி. ஆனால் கொலை மிரட்டல் விவகாரத்தில் ஏற்கனவே திலீப்பிற்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்து, அவரை கைது செய்து விசாரிக்க சிபிஐ தரப்பில் அனுமதி கேட்கப்பட்டு வந்தது.
ஜனவரி 9ம் தேதி டிவி சேனல் வெளியிட்ட ஆடியோ அடிப்படையில் திலீப் குமார் கொலை மிரட்டல் விடுத்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஜனவரி 24ம் தேதி மலையாள டைரக்டர் ரஃபி உள்ளிட்டோருக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் மிமிக்ரி கலைஞர்களை வைத்து இது தயாரிக்கப்பட்ட ஆடியோ என்றும், தான் கொலை மிரட்டல் விடுக்கவில்லை என்றும் திலீப் தரப்பில் கூறப்படுகிறது.
- தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார் பிரதமர் மோடி…ஹைதராபாத்திலிருந்து தனி விமானம் மூலமாக பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்தடைந்தார். அவரை அமைச்சர் துரைமுருகன், […]
- வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் ரூ.35.000 சம்பளத்தில் 26 காலிப்பணியிடங்கள் ..தென்னிந்திய பல மாநில விவசாய கூட்டுறவு சங்கம் (SIMCO) வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் […]
- சென்னைக்கு ஒரு நாள் பயணம்… நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பு…பிரதமர் மோடி இன்று ஒரு நாள் பயணமாக சென்னை வருகிறார். சென்னையில் உள்ள நேரு உள் […]
- ஸ்மார்ட்போன் டேட்டா பயன்பாட்டில் இந்தியா முதலிடத்தில் உள்ளது- பிரதமர் மோடி பெருமிதம்உலகின் அளவில் ஸ்மார்ட் போன் டேட்டா பயன்பாட்டில்இந்தியா முதலிடத்தில் உள்ளது- பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.ஐதராபாத்தில் […]
- ஜூன் 23ம் தேதி இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் தகவல்காலியாக உள்ள நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 23ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என […]
- மதுரை மேயரை முற்றுகையிட்ட பொதுமக்கள்!மதுரை துர்கா காலனியில் அடிப்படை வசதிகேட்டு மேயர் காரை முற்றுகையிட்ட பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது.மதுரை 97 […]
- டிகிரி முடித்தவரா நீங்கள்? தேசிய அனல்மின் நிறுவனத்தில் வேலை ரெடிதேசிய அனல் மின் நிறுவனம் (NTPC Limited ) இந்தியாவில் உள்ள மிக பெரிய அரசுக்கு […]
- 12 ஆண்டுக்கு பின் இன்று மேற்கே திரும்பும் கிழக்கே போன ரயில்போடி ரயில் பாதையை அகல ரயில் பாதையாக மாற்ற ,கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு கிழக்கே […]
- எலிசபெத் ராணியின் நினைவாக மிகப் பெரிய தங்க நாணயம் வெளியீடு…பிரிட்டன் எலிசபெத் மகாராணி முடிசூட்டப்பட்டு 70 ஆண்டுகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. பிரிட்டன் நாட்டில் எலிசபெத் ராணி […]
- நடிகர் போண்டாமணிக்கு திடீர் உடல்நலக்குறைவு…பிரபல நகைச்சுவை நடிகர் போண்டாமணி திடீர் உடல்நலக்குறைவு காரணமாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். […]
- மதுரையில் மாநில அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்மாநில அரசை கண்டித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய மாநில அரசு மற்றும் பொதுத்துறை சங்கங்களின் […]
- நவம்பர் 1 ஆம் தேதி மீண்டும் உள்ளாட்சி தினமாக கொண்டாடப்படும்…தமிழகத்தில் நவம்பர் 1 ஆம் தேதி மீண்டும் உள்ளாட்சி தினமாக கொண்டாடப்படும் என அறிவித்த தமிழக […]
- பள்ளி மாற்றுச்சான்றிதழில் தாய்மொழி – சீமான் பெருமிதம்நாம் தமிழர் கட்சி மேற்கொண்ட தொடர் முயற்சியின் விளைவாக இனி பள்ளி மாற்றுச்சான்றிதழில் தாய்மொழி குறித்த […]
- மதுரை ஆவினில் முறைகேடு- 30 பேரிடம் விசாரணைஆவினில் நடந்த முறைகேடுகள் குறித்து 30 பேரிடம் நேரில் அழைத்து விசாரணை செய்யப்பட்டுள்ளது.மதுரை ஆவினில் கடந்த […]
- உலக முழுவதும் வேகமாக பரவி வரும் குரங்கு அம்மைஉலகம் முழுவதும் 215 பேர் குரங்கம்மை வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதாரஅமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.கொரோனா தொற்று […]