தெய்வம் நின்று கேட்கும் அப்போது அந்த சார் யார் என்பது அனைவருக்கும் தெரியும் என ஓபிஎஸ் பேட்டி அளித்தார்.
பெரியகுளம் செல்வதற்காக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் சென்னையிலிருந்து விமான மூலம் மதுரை வந்தடைந்தார். தொடர்ந்து மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து ஓபிஎஸ் கூறியதாவது:
பெண்களுக்கு எதிரான சட்ட திருத்தம் குறித்த கேள்விக்கு:
அனைத்து குற்ற நடவடிக்கையும் கட்டுப்படுத்த இந்த சட்டம் வழிவகுக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு:
ஈரோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அங்கம் வகிக்கின்ற கட்சிகளிடம் கலந்து பேசி முடிவெடுப்போம்.
திமுக தேர்தல் வாக்குறுதி குறித்த கேள்விக்கு:
திமுகவை பொருத்தவரை சட்டசபை தேர்தலுக்கு முன்பாக ஒரு பேச்சும் அதற்கு பின்பு ஒரு பேச்சுமாக இருக்கிறது என்பது ஒரு வாடிக்கையானது.
டங்ஸ்டீன் சுரங்கம் குறித்த கேள்விக்கு:
டங்ஸ்டன் சுரங்கம் குறித்து முதலில் குரல் கொடுத்தவர்கள் அதிமுக உரிமைமீட்புகுழு ஆகிய நாங்கள் தான். அந்த வகையில் அது எந்த ரூபத்தில் வந்தாலும் அதை தடுத்த நிறுத்துகின்ற இயக்கமாக எங்கள் இயக்கம் இருக்கும்.
2026ம் திமுக ஆட்சியான முதல்வர் கூறியது குறித்த கேள்விக்கு:
தேர்தல் குறித்து முதல்வரின் நிலைப்பாடு வேறு, மக்களின் நிலைப்பாடு வேறாக இருக்கும்.
யார் அந்த சார் என்பது குறித்த கேள்விக்கு:
தெய்வம் நின்று கேட்கும் அப்போது அந்த சார் யார் என்பது அனைவருக்கும் தெரியும்.
மக்களை திமுக ஏற்றுவதாக விஜய் கூறியது குறித்த கேள்விக்கு:
அருமை நண்பர் விஜய்க்கு இப்போது தான் தெரிகிறதா திமுக ஆட்சிக்கு வந்த ஓராண்டு காலத்திலேயே தெரிந்து விட்டது.
யார் அந்த சார்பு வாரத்தில் திமுக அதிமுக மாறி மாறி யார் அந்த சார் என கேட்பது குறித்த கேள்விக்கு:
இந்த இரண்டு சாரிடம் தான் கேட்க வேண்டும் என கூறினார்.