நடிகர் விக்ரம் லீட் கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் கோப்ரா. இந்த படத்தின் சூட்டிங்கை நடிகர் விக்ரம் கடந்த ஜனவரி மாதத்தில் முடித்த நிலையில் படத்தில் முக்கியமான ரோலில் நடித்து வரும் பிரபல கிரிக்கெட் வீரரும் படத்தின் சூட்டிங்கை தற்போது முடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன!
நடிகர் விக்ரம் – இயக்குர் அஜய் ஞானமுத்து இணைந்துள்ள படம் கோப்ரா. சைக்கலாஜிக்கல் திரில்லராக உருவாகும் இந்தப் படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி, கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், கே.எஸ்.ரவிக்குமார், மிருனாளினி, கனிகா, ஷானி சென் போன்ற பலர் நடித்துள்ளனர்.
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் படம் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு சென்னை, கொல்கத்தா, கேரளா, ரஷ்யா போன்ற இடங்களில் நடந்து முடிந்துள்ளது.
படத்தில் விக்ரம் 20க்கும் மேற்பட்ட கெட்டப்புகளில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங்கை அவர் கடந்த ஜனவரி மாதத்திலேயே முடித்துக் கொடுத்துள்ளார். தற்போது விக்ரமின் மகான் படம் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள நிலையில் கோப்ரா படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவர் அஸ்லான் யில்மாஸ் என்ற துருக்கி இன்டர்போல் அதிகாரியாக நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது அவர் தனது காட்சிகளை முடித்துக் கொடுத்துள்ளதாக அஜய் ஞானமுத்து தெரிவித்துள்ளார். படப்பிடிப்பு தளத்தில் இர்பானுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள அவர், இர்பானை போன்ற அன்பான நபருடன் பணிபுரிந்ததில் மகிழ்ச்சி என்றும் இது ஒரு மறக்க முடியாத பயணம் என்றும் தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள இர்பான் பதான், முதல் முறையாக தமிழ் சினிமாவில் இந்த பயணத்தை அளித்ததற்கு நன்றி என்றும் தனது முதல் படத்திலேயே இத்தகைய அற்புதமான டீமுடன் செயல்பட தனக்கு வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். விரைவில் பெரிய திரையில் அஸ்லானை பார்க்க ஆவலுடன் இருப்பதாகவும் கூறியுள்ளார்

- பேரூராட்சி அலுவலகம் முன் வார்ட் உறுப்பினர் போராட்டம்நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த தேவர் சோலை பேரூராட்சி 13வது வர்ட் உறுப்பினர் கிரிஜா இவர் […]
- பதக்கங்களை கங்கையில் வீசி ஏறிந்த டெல்லியல் போராடும் மல்யுத்த வீரர்கள்எங்கள் பதக்கங்களை இன்று மாலை 6 மணிக்கு ஹரித்வாரில் உள்ள கங்கை நதியில் வீசுவோம் என்று […]
- சிஎஸ்கே வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு5வது முறையாக கோப்பையை வென்று சென்னை வந்தடைந்த சிஎஸ்கே வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.ஐபிஎல் தொடரில் […]
- சிஎஸ்கே வெற்றிக்கு பாஜக தொண்டரே காரணம் – அண்ணாமலைகுஜராத் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் கடைசி இரண்டு பந்துகளில் 10 ரன்கள் அடித்த ஜடேஜா […]
- ரூ.128 கோடியில் தொழிற்சாலை.. ஜப்பான் நிறுவனத்துடன் மேலும் ஒரு ஒப்பந்தம்தமிழ்நாட்டில் ரத்த அழுத்த மானிட்டர்களுக்கான உற்பத்தி தொழிற்சாலை நிறுவிட ஒப்பந்தம் முதல்வர் முன்னிலையில் இன்று ஒப்பந்தம் […]
- அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த பேரணி.., பள்ளிக்கல்வித்துறை உத்தரவு..!அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த பேரணி நடத்த வேண்டும் என தமிழக பள்ளக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.அரசு […]
- நரிக்குறவர்கள் சாதிச் சான்றிதழ் பெற வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..!நரிக்குறவர்கள் எஸ்.டி சான்றிதழ் பெற வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.இது தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் […]
- மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கக் கூடாது..,மாற்றுத்திறனாளிகள் ஆணையர் கடிதம்..!பல்வேறு அலுவல் காரணமாக மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்திற்கு வருகை தரும் மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கும் வகையில் நடந்து […]
- பராமரிப்பு பணிகளுக்காக இன்று ஒருநாள் மூடப்படும் ஈஷா யோகா மையம்..!ஆண்டுதோறும் மே 30ஆம் தேதியன்று நடைபெறும் பராமரிப்பு பணிகளுக்காக கோவையில் ஈஷா யோகா மையம் மூடப்படுவதாக […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 177: பரந்து படு கூர் எரி கானம் நைப்பமரம் தீயுற்ற மகிழ் தலைஅம் […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் ஒளிந்திருக்கும் திறமை..!! ஒரு புகைவண்டி நிலையத்தில் பிச்சைக்காரன் ஒருவன் தனது கைப்பை நிறைய பென்சில்களை […]
- பொது அறிவு வினா விடைகள்
- இன்று அணுக்கரு ஆய்வின் ராணி சியான்-ஷீங் வு பிறந்த தினம்யுரேனியம் அணுவிலிருந்து ஐசோடோப்புகளை வாயுப்பரவல் முறையில் பிரித்தெடுத்த அணுக்கரு ஆய்வின் ராணி, நோபல் பரிசு பெற்ற […]
- டிஎன்பிஎல் நிறுவனத்தில் இரண்டாண்டு பயிற்சி வகுப்பு..!டிஎன்பிஎல் நிறுவனத்தில் இரண்டாண்டு பயிற்சி வகுப்பில் சேர ஜூன் 9 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் […]
- குறள் 444தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்வன்மையு ளெல்லாந் தலை.பொருள் (மு.வ): தம்மைவிட (அறிவு முதலியவற்றால்) பெரியவர் தமக்குச் […]