கோவை கொடீசியா விளையாட்டு மைதானத்தில் மு.மா.ச.அறக்கட்டளை சார்பில் திமுக இளைஞர் அணி செயலாளரும் சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் கிரிக்கெட் போட்டியை கோவை கிழக்கு மாநகர் மாவட்ட பொறுப்பாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு நா கார்த்திக் அவர்கள் துவக்கி வைத்தார்.
உடன் மு.மா.ச.அறக்கட்டளை நிறுவனரும் கழக பொதுக்குழு உறுப்பினர் மு.மா.ச.முருகன், பகுதி பொறுப்பாளர் மா.நாகராஜ், இலட்சுமணன், வார்டு செயலாளர் சண்முகசுந்தரம், மேகநாதன், கதிரவன் இளைஞர் அணி தனபால் உதயகுமார் ஆனந்த் விவேக் மற்றும் ஏராளமான கழக தோழர்கள் பங்கேற்றனர்.