

கிரிஸ்பி முந்திரி சிக்கன்:
தேவையான பொருட்கள்:
எலும்பில்லாத சிக்கன் – 500 கிராம் (சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்), உப்பு – சுவைக்கேற்ப, மிளகுத் தூள் – 1 டீஸ்பூன், சோள மாவு – அரை கப், எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு
சாஸ் தயாரிக்க:
எண்ணெய் – 2 டீஸ்பூன், முந்திரி – கால் கப், வரமிளகாய் – 3, வெங்காயம் – 1 (நறுக்கியது), குடைமிளகாய் – 1 (நறுக்கியது), சோயா சாஸ் – 1 டீஸ்பூன், வினிகர் – 1 டீஸ்பூன், தண்ணீர் – 3-4 கப், சர்க்கரை – 2 டீஸ்பூன், உப்பு – சுவைக்கேற்ப, மிளகுத் தூள் – தேவையான அளவு
செய்முறை:
முதலில் சிக்கனை நன்றாகக் கழுவி, அதில் உப்பு, மிளகுத் தூள், சோள மாவு சேர்த்து நன்கு பிரட்டிக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், சிக்கன் துண்டுகளைப் போட்டு நன்கு பொரித்து எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு மற்றொரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும், முந்திரி மற்றும் வரமிளகாயை சேர்த்து பொன்னிறமாக வறுத்து, அவற்றை தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதே வாணலியில் உள்ள எண்ணெயில், வெங்காயம் மற்றும் குடைமிளகாய் சேர்த்து ஒரு நிமிடம் நன்கு வதக்க வேண்டும். பின் அதில் சோயா சாஸ், வினிகர், உப்பு, சர்க்கரை சேர்த்து, சிறிது நீர் ஊற்றி நன்கு கிளறி விட்டு கொதிக்க வைக்க வேண்டும். அடுத்து அதில் சிக்கன் துண்டுகளை சேர்த்து, அதோடு முந்திரி மற்றும் வரமிளகாய் சேர்த்து நன்கு நீர் சுண்டும் வரை கிளறி, இறுதியாக மிளகுத் தூளைத் தூவி கிளறி இறக்கினால், மொறுமொறுப்பான முந்திரி சிக்கன் தயார்.
