• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மோடி தமிழகம் வருவதை கண்டித்து, காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்…

தமிழகத்தை வஞ்சிக்கும் மோடி தமிழகம் வருவதை கண்டித்து எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்புக்கொடி ஏந்தி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தமிழ்நாட்டிற்கு இன்று வருகை தரும், பாரதப் பிரதமர் மோடியை கண்டித்து, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் காலை 10,00 மணிக்கு கருப்புக்கொடி ஏந்தி கண்டனம் ஆர்ப்பாட்டம் நடத்துமாறு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் MLA செல்வப் பெருந்தகை அறிவுறுத்துள்ளார்.

இதனையடுத்து விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வடக்கு ரத வீதியில், விருதுநகர் மேற்கு மாவட்டம் காங்கிரஸ் கமிட்டி சார்பில், கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விருதுநகர் மேற்கு மாவட்ட தலைவர் ரங்கசாமி மற்றும் சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் அசோகன் ஆகியோர் தலைமை தாங்கி கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். சாத்தூர் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் அய்யப்பன் கண்டன ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார்.

ஆர்ப்பாட்டத்தின் போது 100 நாள் வேலை திட்டத்தில் சுமார் 4434 கோடி தர மறுக்கும் மோடியை கண்டித்தும், நீட் தேர்வு உள்ளிட்ட பல்வேறு குளறுபடிகளில் தமிழகத்தின் உரிமையை மறுக்கும் மோடியின் ஆட்சியினை கண்டித்தும், வெள்ளம் உள்ளிட்ட பல ஆயிரம் கோடி பேரிடர் நிதியினை தர மறுக்கும் மோடியை கண்டித்தும், ஜிஎஸ்டி வரி வசூல் செய்து விட்டு, தமிழகத்துக்கு தரவேண்டிய நிதியையும் தர மறுக்கும் மோடி மற்றும் நிதி அமைச்சகத்தை கண்டித்தும், மும்மொழி கல்வி கொள்கை எனும் பெயரில் தமிழகத்தில் இந்தி திணிக்கும் முயற்சியை செய்யும் மோடியின் பாஜக அரசை கண்டித்தும், வக்பு வாரிய சட்ட மசோதா என்னும் புதிய சட்டத்தை அமல்படுத்தி இந்திய மக்களிடையே உள்ள ஒற்றுமையை சீர்குலைக்கும் முயற்சிகள் பிரிவினைவாத மோடி அரசை கண்டித்தும் பல்வேறு கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சாத்தூர் நகர வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர்களும் மற்றும் மூத்த தலைவர்களும் நிர்வாகிகளும், இளைஞர் காங்கிரஸ், மாணவர் காங்கிரஸ், மகிளா காங்கிரஸ் மற்றும் துணை அமைப்பினரும் காங்கிரஸ் பேரியக்க தொண்டர்களும் என பலர் கலந்து கொண்டனர்.