• Sun. Sep 24th, 2023

கவர்னரை கண்டித்து கம்யூனிஸ்டு பேரணி

ByA.Tamilselvan

Nov 15, 2022

கேரள கவர்னரை கண்டித்து கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சியினர் திருவனந்தபுரத்தில் பேரணி நடத்தி நடத்தினர்.
கேரளாவில் ஆளும் கம்யூனிஸ்டு கூட்டணிக்கும், கவர்னர் ஆரிப்முகமது கானுக்கும் மோதல் நிலவி வருகிறது. அரசு விவகாரங்களில் கவர்னர் தலையிடுவதாக முதல்வர் பினராயி விஜயன் குற்றம் சாட்டினார். கேரள சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட பல மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்க மறுக்கிறார் என்றும் அவர் கூறினார். பல்கலைக்கழக வேந்தர் பதவியிலிருந்து கவர்னரை நீக்குவது தொடர்பாகவும், மாநில அமைச்சரவை கூட்டத்தில் அவசர சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று திருவனந்தபுரத்தில் கம்யூனிஸ்டு கட்சியினர் பேரணி நடத்தினர். இந்த பேரணியில் ஏராளமான கம்யூனிஸ்டு தொண்டர்கள் பங்கேற்றனர்.

Related Post

விஸ்வகர்ம சமூக மாணவர்களின் கல்லூரி கல்வி கனவை தடுக்கும் மோடி.., இரா.முத்தரசன் கடுமையான குற்றச்சாட்டு…
ஒரே கையெழுத்தில் நீட் தேர்வு ரத்து என்னாச்சு… மது கடைகளை அடைக்க சொல்லி கருப்பு சட்டை அணிந்து நடத்திய போராட்டம் என்னாச்சு… தி.மு.க.விற்கு முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி சரமாரி கேள்வி..!
காவிரி நதிநீர் தீர்ப்பை செயல்படுத்தமல் கர்நாடக அரசு இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மதிக்காமல் உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து இதுவரை அழைப்பு வரவில்லை – ஓபிஎஸ் பேட்டி..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *