சீன அத்துமீறல் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் எப்போது விவாதிக்கப்படும்? என்று பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பி உள்ளது.
அருணாசல பிரதேச எல்லையில் சமீபத்தில் சீன ராணுவம் அத்துமீறிய விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன. ஆனால் இதற்கு அனுமதி மறுக்கப்படுவதால் அமளி, வெளிநடப்பு என நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தினமும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் எல்லையில் தொடரும் சீன அத்துமீறலை குறிப்பிட்டு பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, இந்தியாவுக்கு எதிராக சீனா போருக்கு தயாராவதாக கூறியிருந்தார். அத்துடன் மத்திய அரசையும் குற்றம் சாட்டியிருந்தார். ஆனால் இதற்கு ஆளும் பா.ஜனதா தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். இதனால் இரு கட்சிகளுக்கும் இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வருகிறது.
இது ஒருபுறம் இருக்க, சீன அத்துமீறல் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த அனுமதிக்காதது ஏன்? என பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கேள்வி எழுப்பி உள்ளது.
இதுகுறித்து கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தனது டுவிட்டர் தளத்தில், டோக்லாமில் ஜாம்பேரி முகடு வரையிலான சீன படைக்குவிப்பு இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுக்கான நுழைவாயிலான சிலிகுரி தாழ்வாரத்தை அச்சுறுத்துகிறது. இது நமது தேசிய பாதுகாப்புக்கு மிகுந்த கவலை அளிக்கிறது. மோடி ஜி நாடு எப்போது சீனா அத்துமீறல் குறித்த விவாதத்தை (சீனா பே சர்ச்சா) காணும்? என கேள்வி எழுப்பி இருந்தார். இதைப்போல கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், சீன அத்துமீறல் தொடர்பாக தங்கள் கட்சி எழுப்பியிருக்கும் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டியது பிரதமர் மோடியின் தார்மீக மற்றும் அரசியல் கடமை எனக்கூறியுள்ளார்.
மேலும் அவர், எல்லை நிலவரங்கள் குறித்தும், சீனாவிடம் இருந்து நாம் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் தேசம் அறிய விரும்புகிறது. ஆனால் இது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் கூடாது என்று ஏன் வலியுறுத்துகிறீர்கள்? என்றும் வினவியுள்ளார்.
- மதுரையில்-பெண்களை பார்த்து ஏளனமாக சிரித்தபடி சென்ற உதயநிதிமதுரையில் உதயநிதி ஸ்டாலின் நிகழ்ச்சிக்கு அலங்கரித்து வைக்கப்பட்ட கரும்பு, வாழை, இளநீரை கூட்டம் கூட்டமாக அள்ளி […]
- நீலகிரி-பந்தலூர் சுற்று வட்டார பகுதிகளில் காட்டு யானைகள் அட்டகாசம்நீலகிரி மாவட்டம்.பந்தலூரை அடுத்துள்ள குந்தலாடி குடியிருப்பு பகுதிக்குள் யானைகள் நாழைந்ததால் பொது மக்கள் அச்சமடைந்துள்ளனர்…பந்தலூர் சுற்று […]
- பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!!பிரதமர் நரேந்திர மோடிக்கு , தமிழக முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், கோவிட் பெருந்தொற்று காலத்தில், […]
- ஐஸ்கிரீம் கோன் போல் டீ, காபி கப்..,
ஆசிரியையின் அசத்தலான தயாரிப்பு..!ஒருமுறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் தண்ணீர் மற்றும் டீ, காபி பிளாஸ்டிக் டம்ளர்களை பயன்படுத்தினால் அது […] - காஷ்மீரில் கொட்டும் பனியில் கர்ப்பிணியை தோளில் சுமந்து சென்ற ராணுவவீரர்கள்..!ஜம்மு காஷ்மீரில் நிலவி வரும் கடும் பனிப்பொழிவின் காரணமாக, நிறைமாத கர்ப்பிணியை மருத்துவ சிகிச்சைக்காக ராணுவ […]
- பழனி அரசு மருத்துவமனையில்..,
தூய்மைப்பணியாளர்கள் திடீர் உள்ளிருப்பு போராட்டம்..!திண்டுக்கல் மாவட்டம், பழனி அரசு மருத்துவமனையில் தூய்மைப் பணியாளர்கள் திடீரென உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருவதால் […] - சிந்தனை கருத்தாளர் விருது பெற்ற மதுரை மாணவிக்கு பாராட்டு விழாமதுரை அருகே சோழவந்தான் தனியார் பள்ளியில் படிக்கும் பிளஸ் டூ மாணவி சர்வதேச சிந்தனை கருத்தாளர் […]
- நீலகிரி – கூடலூரில் அரசு பதுமான கடை உடைத்து திருட்டுநீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து காலமூலா செல்லும் வழியில் இரண்டு அடுத்தடுத்து மதுபான கடைகள் உள்ளது […]
- தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற முதியவர் உயிரிழப்பு….சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நேற்று தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற முதியவர் அரசு மருத்துவமனையில் […]
- மதுரையில் ஒரே வாரத்தில் ஒரே பகுதியில் 2 கொலையால் பொதுமக்கள் அதிர்ச்சிமதுரை திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம் உள்ள தென்பரங்குன்றம் பகுதியில் நேற்று முன்தினம் தைபூசம் மற்றும் தைபௌர்ணமியை […]
- சிப்ஸ் பாக்கெட்டை இணைந்து திருடும் நாயும் குரங்கும் : வைரல் வீடியோ..!கடைக்கு வெளியே தொங்கவிடப்பட்டுள்ள சிப்ஸ் பாக்கெட்டுகளை நாயின் முதுகில் ஏறிக்கொண்டு குரங்கு திருடும் காட்சி இணையதளத்தில் […]
- குரைப்பவர்கள் கடிக்க மாட்டார்கள் பதான் படத்துக்கு ஆதரவாக நடிகர் பிரகாஷ்ராஜ்திருவனந்தபுரத்தில் நடைபெற்ற மலையாள ஊடகமான மாத்ருபூமி சர்வதேச விழாவில் கலந்து கொண்ட நடிகர்பிரகாஷ் ராஜ், பதான் […]
- அதிமுக வேட்பாளர் கேஎஸ் தென்னரசு வேட்புமனு தாக்கல்ஈரோடு இடைத்தேர்தலில் வேட்பு மனுதாக்கல் செய்ய கடைசி நாளான இன்று அதிமுக வேட்பாளர் தென்னரசு வேட்புமனு […]
- மீண்டது… நமது அரசியல் டுடே வார இதழ் 11.02.2023
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 110: பிரசம் கலந்த வெண் சுவைத் தீம்பால்விரி கதிர்ப் பொற்கலத்து ஒரு கை […]