பீகார் மாநிலத்தில் விஷ சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்தது. நேற்று சட்டசபையில் பேசிய முதல்வர் நிதிஷ்குமார் விஷ சாராயத்தால் பலியானவர்களுக்கு எவ்வித இழப்பீடும் வழங்க முடியாது என்றார்.
பீகார் மாநிலத்தில் நிதிஷ்குமார் தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 14-ந் தேதி சரன் மாவட்டத்தில் உள்ள சாப்ரா பகுதியில் விஷ சாராயம் குடித்ததில் 21 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மற்றவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் சிகிச்சை பலனளிக்காமல் கடந்த 15ம் தேதி 5 பேர் இறந்ததால் பலியானவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்தது. இதற்கிடையே சிகிச்சை பலனளிக்காமல் நேற்றும் 2 பேர் இறந்தனர். இதனால் சாவு எண்ணிக்கை 28 ஆக உயர்ந்தது.
இதற்கிடையே, எதிர்க்கட்சியான பா.ஜனதா, விஷ சாராயத்தால் பலியானவர்களின் எண்ணிக்கையை அரசு மறைப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளது. இதுபற்றி சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் விஜய் குமார் சின்கா நிருபர்களிடம் கூறுகையில், மாநிலம் முழுவதும் விஷ சாராய விற்பனை போலீசார் பாதுகாப்போடு நடைபெறுகிறது. ஆனால் முதல்வர் நிதிஷ்குமார் குற்றவாளிகள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அமைதி காக்கிறார் என்று தெரிவித்தார்.
இதுகுறித்து முதல்வர் நிதிஷ்குமார் நிருபர்களிடம் பேசுகையில், விஷ சாராயத்தை குடித்தால் இறந்துதான் போவார்கள் என மக்களை முதல் மந்திரி நிதிஷ்குமார் எச்சரித்துள்ளார். நேற்று சட்டசபையில் பேசிய அவர் கூறியதாவது:- பீகாரில் மதுவிலக்கு தற்போது நடைமுறையில் உள்ளது. இதனையும் மீறி இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறியுள்ளது. ஏழை குடும்பத்தில் உள்ளவர்கள் தங்களது வாழ்வாதாரத்திற்காக விஷ சாராயம் விற்றுக் கொண்டிருந்தனர். ஆனால் தற்போது அவர்களுக்கு லட்சக்கணக்கில் நிதியுதவி செய்து வேறு வேலைகளுக்கு மாற்றிவிட்டோம். பீகாரில் மதுவிலக்கு அமல்படுத்தியதை கடந்த 2017-ம் ஆண்டு பிரதமர் பாராட்டியிருந்தார். ஆனால் தற்போது அவரது கட்சியினர் இதனை எதிர்த்து பேசுகின்றனர். பா.ஜனதா ஆளும் மாநிலங்களில் இருந்து பீகாருக்கு விஷ சாராயம் கொண்டுவரப்படுகிறது. விஷ சாராயத்தால் பலியானவர்களுக்கு எவ்வித இழப்பீடும் வழங்கப்படாது. இவ்வாறு அவர் கூறினார்.
- மாரடைப்பு… வகுப்பறையிலேயே உயிரிழந்த 11ம் வகுப்பு மாணவிமத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் 11-ம் வகுப்பு பள்ளி மாணவிக்கு மாரடைப்பு ஏற்பட்டு வகுப்பறையிலேயே உயிரிழந்த […]
- நாகர்கோவில்- நாகராஜா கோவிலில் தைப்பெருந்திருவிழா கொடியேற்றம்கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பிரசதிபெற்ற நாகராஜா கோவிலில் தைப்பெருந்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது .கன்னியாகுமரி மாவட்டம் […]
- பேருந்தில் அபாயகரமான பயணம்… பள்ளி மாணவர்கள் சாகசம்..!!நீலகிரி மாவட்டம் பள்ளி மாணவகள் அபாயகரமான பயணம் மேற்கொள்கின்றனர்கூடுதல் பேருந்து இயக்க பொதுமக்கள்கோரிக்கைநீலகிரி மாவட்டம் கூடலூர் […]
- மாணவ மாணவிகளுக்கு உடல்நல குறைவு -விஜய் வசந்த எம்பி.ஆறுதல்கன்னியாகுமிரியில் என்.எஸ்.எஸ் முகாமில் கலந்து கொண்ட மாணவ,மாணவிகள் உடல் நலக்குறைவு விஜய்வசந்த எம்.பி. நேரில் பார்வையிட்டு […]
- மஞ்சூர் முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்நீலகிரி மாவட்டம் மஞ்சூர் மோல் பஜார் இன்கோ தேயிலை தொழிற்சாலை அருகில் அமைந்துள்ள பழமை வாய்ந்த […]
- பிப். 3ம் தேதி ஆசிரியர் தகுதித் தேர்வு…ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 2க்கான தேர்வு பிப்ரவரி 3ம் தேதி தொடங்கி பிப்ரவரி 14ம் […]
- நீலகிரி அருகே கிணற்றில் விழுந்து சிறுத்தை உயிரிழப்புநீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே ஏலமன்னா அருகே கிணற்றில் விழுந்த சிறுத்தை உயிரிழந்தது. வனத்துறையினர் இது […]
- என் இனிய தனிமையே முதல் பாடல் வெளியீடுவளர்ந்து வரும் நடிகர் ஸ்ரீபதி, சகு பாண்டியன் இயக்கத்தில் ஜேம்ஸ் வசந்த் இசையில் உருவாகும் “என் […]
- கெவி படத்தின் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்ட யோகிபாபு, கலையரசன்ஆத்யக் புரடக்சன்ஸ் சார்பில் கௌதம் சொக்கலிங்கம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘கெவி’. தமிழ் தயாளன் இந்தப் […]
- வித்தியாசமான கோணத்தில் உருவாகியுள்ள ‘குடிமகான்’சினாரியோ மீடியா ஒர்க்ஸ் சார்பில் விஜய் சிவன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘குடிமகான்’. நாளைய இயக்குநர் […]
- தோனி என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் லெட்ஸ் கெட் மேரீட் படத்தின் தொடக்க விழாதோனி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாராகும் ‘எல்.ஜி.எம்’ (லெட்ஸ் கெட் மேரீட் ) எனும் திரைப்படத்தின் […]
- பர்னிங் ஸ்டார் அறிமுகமாகும் தமிழ் படம்சம்பூர்ணேஷ் பாபு. தெலுங்கு படவுலக கதாநாயகர். இவரை அங்கே ‘பர்னிங் ஸ்டார்’ என்று அழைப்பார்கள். இவரை […]
- மஞ்சூரில் பள்ளி மாணவர்களைக் கொண்டு அடிக்கல் நாட்டு விழாபுதிய வகுப்பறைகள் கட்ட பள்ளி மாணவர்களைக் கொண்டு அடிக்கல் நாட்டு விழா பெற்றோர் ஆசிரியர் கழகம் […]
- மோடியின் ஆவணப்படம் பார்த்த மாணவர்கள்- போலீசார் இடையே தகராறு-வீடியோடெல்லி பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போலீசார் இடையே தகராறு ஏற்பட்டதையடுத்து தள்ளுமுள்ளு நிலவி வருகிறது.டெல்லி பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் […]
- ஓ.பி.எஸ். அணியில் எல்லோரும் ஒன்று திரண்டால்…எடப்பாடியை அநாதை ஆக்கலாம்..? உ. தனிஅரசு பேட்டிஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தலில் அ.தி.மு.க. ஓபிஎஸ் அணிக்கு ஆதரவு அளிப்பதாக கூறி அவரை […]