• Thu. Apr 18th, 2024

நரிக்குறவர்களுடன் தேநீர் அருந்திய முதல்வர் ஸ்டாலின்

ByA.Tamilselvan

Sep 15, 2022

விருதுநகர் அரசு விருந்தினர் மாளிகையில் நரிக்குறவர்கள், குருவிக்காரர்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார் அப்போது அவர்களுடன் தேனீர் அருந்தினார்.
தமிழ்நாட்டை சேர்ந்த நரிக்குறவர்கள் ஆகிய மூன்று சமூகங்களையும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை காரணமாக 4 சமூகங்களையும் சேர்ந்த பல லட்சம் மக்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் முன்னுரிமையும், சமூகநீதியும் கிடைக்கும்.இதற்கு தொடர்ந்து குரல் கொடுத்தமைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக விருதுநகர் அரசு விருந்தினர் மாளிகையில் முதல்வர் ஸ்டாலினை அச்சமூகத்தை தேர்ந்தவர்கள் சந்தித்தனர். அவர்களுடன் முதல்வர் ஸ்டாலின் தேநீர் அருந்தினார். பின்னர் அவர்கள் முதல்வருக்கு பாசிமணி மாலை அணிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *