• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

கல்லணை ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் – வெங்கடேசன் எம்எல்ஏ பங்கேற்பு

ByN.Ravi

Aug 22, 2024

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே கல்லணை ஊராட்சியில், மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
ஊராட்சி மன்ற தலைவர் சேது சீனிவாசன் வரவேற்றார். வாடிப்பட்டி வட்டாட்சியர்கள் ராமச்சந்திரன், பார்த்திபன், யூனியன் ஆணையாளர்கள் கலைச்செல்வி, வள்ளி, ஒன்றிய குழு தலைவர் பஞ்சு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த முகாமில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, வாழ்வாதார கடன் உதவிகள், காவல்துறை, சுகாதாரத்துறை மாற்றுத்திறனாளிகள் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, தமிழ்நாடு மின்சார வாரியம், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை உள்ளிட்ட துறைகளை சேர்ந்த அதிகாரிகளின் பல்வேறு சேவைகள் குறித்து தனித்தயாக அரங்கு அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு சேவைகள் வழங்கப்பட்டது. சுமார் 400க்கும் மேற்பட்ட பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு தீர்வு காணப்பட்டது. இதில்,திமுக மாவட்ட அவைத்தலைவர் பால
சுப்ரமணியன், ஒன்றிய செயலாளர்கள் தன்ராஜ், பரந்தாமன், அவைத்தலைவர் நடராஜன், நகர் செயளாலர் ரகுபதி, ஒன்றிய கவுன்சிலர் சுப்பாராயலு, பேரூராட்சித் தலைவர் ரேணுகா ஈஸ்வரி கோவிந்தராஜ், ஒன்றிய கவுன்சிலர் சரவணன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில், கல்லணை, கோட்டைமேடு, மணியஞ்சி, தண்டலை உள்ளிட்ட ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு மனு அளித்தனர். முடிவில், ஊராட்சிமன்றத் துணைத்தலைவர் அய்யம்மாள் அறிவழகன் நன்றி கூறினார்.