• Wed. Mar 26th, 2025

முன்னால் முதலமைச்சர் எடப்பாடியார்ஆலோசனைக் கூட்டம்

ByK Kaliraj

Mar 2, 2025

தமிழ்நாடு முன்னால் முதலமைச்சர் எடப்பாடியார்ஆலோசனையின் பேரில் விருதுநகர் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட…
சாத்தூர், அருப்புக்கோட்டை, திருச்சுழி ஆகிய சட்டமன்ற தொகுதிகளில்
ஒன்றிய,நகர,பேரூர் கழகங்களில் உள்ள பாக செயலாளர்கள் மற்றும் பாக பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம்விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர்
ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

கழக அமைப்பு செயலாளர், முன்னாள் அமைச்சர்பாஸ்கரன் ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் மைக்கேல் ராயப்பன்,ஆகியோர் முன்னிலையில்
அருப்புக்கோட்டை – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தங்கநிலா ரெசிடென்ஸி-ல் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் ஜெயலலிதா பேரவை இணை செயலாளரும் முன்னால் எம்எல்ஏவுமான ராஜவர்மன், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணை செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான .சுப்பிரமணியன், கழக மகளிரணி துணை செயலாளர் மணிமேகலை, ,தலைமை கழக நிர்வாகிகள்,மாவட்ட கழக நிர்வாகிகள்,ஒன்றிய,நகர,பேரூர் கழக செயலாளர்கள்,மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள்,திரளாக கலந்து கொண்டனர்.