நீங்கள் விமானநிலையம், உணவு விடுதி, உடற்பயிற்சிக் கூடம் என எங்கு சென்றாலும் உங்கள் கைகளை கழுவ ஒரு திரவம் வைக்கப்பட்டிருக்கும். நம் கைகளில் தேங்கும் நுண்ணுயிரிகளை கொல்லப் பயன்படும் டெட்டால் போனற ஒரு சோப்புத் திரவம் தான் அது. நமக்கு அது மணக்க மணக்க தெரிந்தாலும் அதில் இருக்கும் ஆபத்து குறித்து அறிவதும் தற்போது அவசியமாகி விட்டது. காரணம் அதில் இருக்கும் ட்ரைக்லோசான் எனும் தனிமம் தான். நுண்ணுயிரிகளை கொல்லும் திறன் படைத்த இந்த தனிமம் ஆபத்தானது என எத்தனை பேருக்கு தெரியும்?
ட்ரைக்லோசன் எனும் இந்த தனிமம் முகம் கழுவும் திரவத்தில் இருந்து பற்பசை மற்றும் வாசனை திரவியங்கள் வரை ஒரு உட்பொருளாக சேர்க்கப்படுகிறது. இதற்கு காரணம் இந்த தனிமம் குறைந்த விலையில் கிடைக்கும் ஒரு ஆன்டி பாக்டீரியல் என்பதுதான். தூய்மை எனும் ஒரு வார்த்தையை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் சில நிறுவனங்கள் மக்கள் பொதுவாக கூடும் இடங்களில் அதாவது உணவகங்கள் போன்ற இடங்களில் நமது கைகளை கழுவ என்று டெட்டால் போன்று சில திரவங்களை வைக்கின்றன. அனால் இவை நுண்ணுயிரிகளை அழிப்பதுடன் நிற்பதில்லை. பல்வேறு பக்க விளைவுகளையும் ஏற்படுத்துகின்றன.
எப்.டி.ஏ என்று சொல்லப் படும் அரசின் உணவு மற்றும் மருந்துகள் துறையின் சமீபத்திய அறிக்கையில் காணப் படும் செய்தி நம்மை மிகவும் யோசிக்க வைக்கிறது. அந்த அறிக்கையில் நம் கைகளை சுத்தம் செய்ய சாதாரண சோப் மற்றும் தூய்மையான தண்ணீரே போதும். வேதியியல் தனிமங்கள் அடங்கிய சோப்புக்கரைசல் தேவையில்லை. இவை நம் உடலை சுத்தம் செய்வதுடன் கெடுதியும் செய்வதாக குறிப்பிட்டுள்ளது. சில மிருகங்கள் மூலமாக நடத்தப்பட்ட சோதனைகளில் ட்ரைக்லோசான் கலந்த திரவம் மூலம் நம்மை சுத்தம் செய்யும் போது தைராய்டு ஹார்மோன் தொடர்பான கோளாறுகள் ஏற்படுவது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
ஒரு மாளிகைக்கடைக்கு சென்று டெட்டால் போன்ற ஒரு நுண்ணுயிர்க் கொல்லியை வாங்கும் முன்பு அதில் கலந்துள்ள தனிமங்களை ஆராய்வது அவசியம். ட்ரைக்லோசன் போன்ற ஒரு அபாயகரமான ஒரு தனிமம் கலந்த ஒரு நுண்ணுயிர்கொல்லியால் நமக்கு கிடைக்கும் நன்மைகளை விட தீமைகளே அதிகம் என்பதை நாம் புரிந்து கொள்வது அவசியம். இவை நமக்கு நன்மை செய்வதை விட தீமையே செய்யும் என்பது தான் உண்மை. இவை நாளமில்லாச்சுரப்பிகளை கூட பாதிக்க வைக்கும் வல்லமை படைத்தவை. இனப்பெருக்க ஹார்மோனிகளிலும் ஏற்ற இறக்கங்களை செய்ய வல்லவை.
முக்கியமாக இந்த தனிமம் கலந்த பொருட்களை குழந்தைகள் பயன்படுத்தும் போது ஏற்படும் பாதிப்புகள் மிக அதிகம். உதாரணமாக இந்த தனிமம் கலந்த பற்பசையை பயன்படுத்தும் போது தோல் அழற்சி ஏற்படுவதுடன் பல்வேறு இனம் புரியாத பாதிப்புகளும் ஏற்படுவது தற்போது கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறது. குழந்தைகளுக்கு ஒவ்வாமை, ஆஸ்துமா மற்றும் சிரங்கு போன்ற பாதிப்புகளும் ஏற்படும்.
மொத்தத்தில் தைராய்டு சுரப்பியில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படுவதுடன் நாளமில்லா சுரப்பிகளிலும் இது பாதிப்பை ஏற்படுத்துகிறது. திசு வளர்ச்சி குறைபாடுகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைதல், இனப்பெருக்க உறுப்புகளில் நச்சுத்தன்மை என இந்த தனிமம் செய்யும் பாதிப்புகள் மெல்லக் கொள்ளும் விஷமாக நம்முள் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. ட்ரைக்லோசன் பாதிப்புகள் குறித்த சர்ச்சை தொடங்கிய பின்னர் இப்போது பல்வேறு நிறுவனங்களும் இந்த தனிமத்தை பயன்படுத்துவதை நிறுத்த ஆரம்பித்துள்ளன. இனியாவது வேதியியல் தனிமங்கள் மூலம் கைகளையும் உடலையும் சுத்தப்படுத்துவதை நாம் தவிர்த்து வினிகர், எலுமிச்சை போன்ற இயற்கை சுத்திகரிப்பான்களை பயன்படுத்தலாம்.
மொத்தத்தில் தைராய்டு சுரப்பியில் ஏற்ற இறக்கங்களை ஏற்படுத்தி நாளமில்லா சுரப்பிகளிலும் இது பாதிப்பை ஏற்படுத்துகிறது. திசு வளர்ச்சி குறைபாடுகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைதல், இனப்பெருக்க உறுப்புகளில் நச்சுத்தன்மை என இந்த தனிமம் செய்யும் பாதிப்புகள் மெல்லக் கொல்லும் விஷமாக நம்முள் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. ட்ரைக்லோசான் பாதிப்புகள் குறித்த சர்ச்சை தொடங்கிய பின்னர் இப்போது பல்வேறு நிறுவனங்களும் இந்த தனிமத்தை பயன்படுத்துவதை நிறுத்த ஆரம்பித்துள்ளன. இனியாவது நாம் வேதியியல் தனிமங்கள் மூலம் கைகளையும் உடலையும் சுத்தப் படுத்துவதை நம் தவிர்த்து வினிகர், எலுமிச்சை போன்ற இயற்கை சுத்திகரிப்பான்களை பயன்படுத்துவது சிறந்தது. இயற்கையில் கிடைக்கும் பெருஞ்சீரகம், டி ட்ரீ, திராட்சை, அன்னாசி கலந்த இயற்கை சுத்திகரிப்பன்கள் எந்த பக்கவிளைவுகளை ஏற்படுத்தாது. இதை மக்கள் மனதில் ஆழப்பதிய செய்வதே சிறந்தது.
- மூதாட்டியை கட்டிபோட்டு 5 சவரன் செயின் பறித்த கொள்ளையன் சிக்கினான்மதுரை சோழவந்தான் அருகே துணிகரம் வீட்டில் தனியாக வசித்த மூதாட்டியை கட்டிபோட்டு 5 சவரன் தங்க […]
- திடீரென்று கட்டுப்பாட்டை இழந்த கார் பாலத்தின் மீது பயங்கரமாக மோதி விபத்துதிடீரென்று கட்டுப்பாட்டை இழந்த கார் அங்கிருந்த பாலத்தின் மீது பயங்கரமாக மோதி விபத்து விருதுநகர் அருகே […]
- மதுரை அருகே விபத்தை தவிர்க்க கடைக்குள் புகுந்த கார்மதுரை பசுமலை பகுதியில் சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகனம் விபத்தை தவிர்க்க கார் அருகில் […]
- காதல் விவகாரத்தில் டிரைவரை கொன்ற 3 பேர் கைது.!!மதுரையில் காதல் விவகாரத்தில் டிரைவரை கொன்ற இளம்பெண்ணின் குடும்பத்தினர்- 3 பேரை கைது செய்து போலீசார் […]
- முடி சூட்டும் விழா முடிந்தது.. மக்களின் குரல்களை நசுக்கும் பணி தொடங்கியது.. ராகுல் காந்திமல்யுத்த வீரர் வீராங்கனைகள் கைதுக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்பாஜக […]
- செங்கோல் முதல் நாளே வளைந்துவிட்டது -முதல்வர் மு .க ஸ்டாலின்.மல்யுத்த வீராங்கனைகள் மீது தாக்குதல் செங்கோல் முதல் நாளே வளைந்துவிட்டது என்பதையே இது காட்டுகிறது. என […]
- பேப்பர் மற்றும் மை விலையை கட்டுப்படுத்த வேண்டும்- மதுரை பிரிண்டர்ஸ் அசோசியேஷனின் தீர்மானம்கடுமையாக உயர்ந்து கொண்டிருக்கும் பேப்பர் மற்றும் மை விலையிணை மத்திய மாநில அரசுகள் உடனடியாக கட்டுப்படுத்த […]
- புது நாடாளுமன்றம் திறக்கும் நாளில் நிலநடுக்கத்தால் குலுங்கிய தலைநகர் டெல்லிவரலாற்றுச் சிறப்புமிக்க புதிய நாடாளுமன்ற கட்டிடத்தைப் பிரதமர் மோடி திறந்து வைத்த நிலையில், இன்று டெல்லி […]
- ரூ.75 நாணயம் கருப்பு நிறமாக இருப்பது ஏன்?இந்திய நாடாளுமன்றத்தின் படம் மற்றும் அசோக சின்னம் இரண்டும் அடங்கிய வகையில் இந்த நாணயம் உருவாக்கப்பட்டு […]
- முதல் நாளே பிரச்சனை-புதிய நாடாளுமன்றம் நோக்கி பேரணி சென்ற மல்யுத்த வீராங்கனைகள் கைது
- உலகபட்டினி தினத்தை முன்னிட்டு விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக 1000 பேருக்கு மதிய உணவுஉலகபட்டினி தினத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 1000 பேருக்கு மதிய உணவு […]
- கத்திரி வெயில் இன்றுடன் நிறைவு!..வெயில் படிப்படியாக குறையும்தமிழகத்தில் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் இன்றுடன் நிறைவடைகிறது.வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் படிப்படியாக […]
- மருத்துவகல்லூரிகளுக்கான அங்கீகாரம் ரத்து-தமிழக அரசுக்கு ஓ.பி.எஸ் கண்டனம்மருத்துவக்கல்லூரிக்கான அங்கீராரம் ரத்து செய்யப்பட தி.மு.க. அரசின் மெத்தனப் போக்கிற்கு, அலட்சியப் போக்கே காரணம் என […]
- பத்திரிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுமனைப் பட்டா ரத்து -ஏற்புடையதல்ல! – எஸ்.டி.பி.ஐ.மதுரையில் அரசு ஒதுக்கீட்டில் பத்திரிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுமனைப் பட்டாவை ரத்து செய்த நடவடிக்கை ஏற்புடையதல்ல! – […]
- 2023 ஐபிஎல் திருவிழா இன்றுடன் நிறைவு..கோப்பையை வெல்லுமா சென்னை அணி?ஐபிஎல் போட்டியில் சென்னை மற்றும் குஜராத் அணிகள் இன்று இரவு மோதுகின்னறன. இன்றுடன் 2023 ஐபிஎல் […]