• Fri. Apr 26th, 2024

செஸ்ஸபிள் மாஸ்டர் தொடர் போட்டி… இறுதிப் போட்டிக்கு முன்னேறிய தமிழக வீரர்…

Byகாயத்ரி

May 25, 2022

செஸ்ஸபிள் மாஸ்டர் தொடர் போட்டியில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். செஸ்ஸபிள் மாஸ்டர் தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் நெதர்லாந்து அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். இந்த போட்டியில் முதல் முறையாக இந்தியர் ஒருவர், இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதனை நிகழ்த்தியுள்ளார். இறுதி ஆட்டத்தில் சீன வீரரும் உலக தரவரிசை பட்டியலில், இரண்டாம் இடத்தில் இருப்பவரும், அரையிறுதியில் கார்ல்சனை வீழ்த்தியவருமான டிங் லைன் (Ding Liren)யை எதிர்த்து பலப்பரீட்சை நடத்தவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *