• Fri. Apr 26th, 2024

கிரிக்கெட் கேப்டன் மித்தாலி ராஜ் ஓய்வு அறிவிப்பு

ByA.Tamilselvan

Jun 8, 2022

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மித்தாலி ராஜ், அனைத்து வகை சர்வதேச போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியதாவது:- ஒவ்வொரு பயணத்தையும் போல இந்த பயணமும் முடிவுக்கு வந்துள்ளது. நான் அனைத்து வகை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்தும் ஓய்வு பெறுகிறேன். இந்திய அணியை பல வருடங்களாக சிறப்பாக வழி நடத்தியதற்கு பெருமைப்படுகிறேன். என் கிரிக்கெட் வாழ்க்கை இந்திய பெண்கள் அணியையும், என்னையும் சிறந்த வடிவத்திற்கு கொண்டு வந்துள்ளது. போட்டிகளில் ஓய்வு பெற்றாலும், பெண்கள் கிரிக்கெட்டிற்கு வேறு வகையில் பங்களிப்பு செலுத்துவேன். என்னுடைய ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அனைவருக்கும் நன்றி. என்னுடைய 2வது இன்னிஸை உங்களுடைய ஆதரவுடன் ஆரம்பிக்கிறேன். இவ்வாறு மித்தாலி ராஜ் தெரிவித்துள்ளார். ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டனாக இருந்து வந்த மித்தாலி ராஜ் இதுவரை இந்திய அணிக்காக 232 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 7805 ரன்களும், 50.68 சராசரியும் வைத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *