சென்னையில் ஜனவரி 3ஆம் தேதி, ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் புத்தகக் காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
ஜனவரி 3ஆம் தேதி முதல், ஜனவரி 21 வரை இந்தப் புத்தகக் காட்சி நடைபெற இருக்கிறது. வேலை நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரை புத்தகக் காட்சி நடைபெறும். மொத்தம் 19 நாட்கள் புத்தகக் காட்சி நடைபெறுகிறது. தொடக்க விழாவில் தமிழ்நாடு கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்து கொள்ள உள்ளார். ஒவ்வொரு நாள் மாலையிலும் சிந்தனை அரங்கில் தமிழகத்தின் தலைச்சிறந்த அறிஞர்கள், எழுத்தாளர்களின் உரைவீச்சுக்கள் இடம் பெறுகிறது.