மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளுக்கான இரண்டாம் அமர்வு செய்முறை தேர்வு தேதிகளை அறிவித்துள்ளது! அதன்படி, சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளுக்கான இரண்டாம் பருவ செய்முறை தேர்வுகள் மார்ச் 2ம் தேதி முதல் தொடங்கும்.
முந்தைய அறிவிப்பின்படி, தியரி தேர்வுகள் ஏப்ரல் 26ம் தேதி ஆஃப்லைனில் தொடங்கும். சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு 2 ஆம் அமர்வுத் தேர்வுகளுக்கான தேதித்தாள் cbse.nic.in என்ற வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பள்ளிகள் பிராக்டிகல் தேர்வை மார்ச் 2, 2022 முதல் தொடங்கி, அந்தந்த வகுப்புத் தேர்வுகள் முடிவதற்கு 10 நாட்களுக்கு முன்பு நடத்தி முடிக்க வேண்டும்.
பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகளை நடத்துவதற்கு வெளிப்புற தேர்வாளர்கள் வாரியத்தால் நியமிக்கப்படுவார்கள். எனினும், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் பள்ளிகளால் கண்காணிக்கப்படும். பிராக்டிகல் / உள் மதிப்பீட்டின் மதிப்பெண்கள் மார்ச் 2 முதல் அந்தந்த வகுப்பின் கடைசி தேதி வரை பதிவேற்றப்படும்.
கோவிட் வழிகாட்டுதல்களின்படி இந்தத் தேர்வுகளை நடத்த பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. “கூட்டம் மற்றும் சமூக இடைவெளியைத் தவிர்க்க, பள்ளிகள் குழு/தொகுதி மாணவர்களை தலா 10 மாணவர்களைக் கொண்ட துணைக் குழுக்களாகப் பிரிக்ககூடும். 10 மாணவர்களைக் கொண்ட முதல் குழு ஆய்வகப் பணிகளில் கலந்து கொள்ளலாம், மற்றவர்கள் அதற்கான எழுத்துப்பணிகளில் ஈடுபடலாம், பின்னர் இந்த பணிகள் மாற்றப்படும்.” என வாரியம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பேரூராட்சி அலுவலகம் முன் வார்ட் உறுப்பினர் போராட்டம்நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த தேவர் சோலை பேரூராட்சி 13வது வர்ட் உறுப்பினர் கிரிஜா இவர் […]
- பதக்கங்களை கங்கையில் வீசி ஏறிந்த டெல்லியல் போராடும் மல்யுத்த வீரர்கள்எங்கள் பதக்கங்களை இன்று மாலை 6 மணிக்கு ஹரித்வாரில் உள்ள கங்கை நதியில் வீசுவோம் என்று […]
- சிஎஸ்கே வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு5வது முறையாக கோப்பையை வென்று சென்னை வந்தடைந்த சிஎஸ்கே வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.ஐபிஎல் தொடரில் […]
- சிஎஸ்கே வெற்றிக்கு பாஜக தொண்டரே காரணம் – அண்ணாமலைகுஜராத் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் கடைசி இரண்டு பந்துகளில் 10 ரன்கள் அடித்த ஜடேஜா […]
- ரூ.128 கோடியில் தொழிற்சாலை.. ஜப்பான் நிறுவனத்துடன் மேலும் ஒரு ஒப்பந்தம்தமிழ்நாட்டில் ரத்த அழுத்த மானிட்டர்களுக்கான உற்பத்தி தொழிற்சாலை நிறுவிட ஒப்பந்தம் முதல்வர் முன்னிலையில் இன்று ஒப்பந்தம் […]
- அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த பேரணி.., பள்ளிக்கல்வித்துறை உத்தரவு..!அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த பேரணி நடத்த வேண்டும் என தமிழக பள்ளக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.அரசு […]
- நரிக்குறவர்கள் சாதிச் சான்றிதழ் பெற வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..!நரிக்குறவர்கள் எஸ்.டி சான்றிதழ் பெற வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.இது தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் […]
- மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கக் கூடாது..,மாற்றுத்திறனாளிகள் ஆணையர் கடிதம்..!பல்வேறு அலுவல் காரணமாக மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்திற்கு வருகை தரும் மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கும் வகையில் நடந்து […]
- பராமரிப்பு பணிகளுக்காக இன்று ஒருநாள் மூடப்படும் ஈஷா யோகா மையம்..!ஆண்டுதோறும் மே 30ஆம் தேதியன்று நடைபெறும் பராமரிப்பு பணிகளுக்காக கோவையில் ஈஷா யோகா மையம் மூடப்படுவதாக […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 177: பரந்து படு கூர் எரி கானம் நைப்பமரம் தீயுற்ற மகிழ் தலைஅம் […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் ஒளிந்திருக்கும் திறமை..!! ஒரு புகைவண்டி நிலையத்தில் பிச்சைக்காரன் ஒருவன் தனது கைப்பை நிறைய பென்சில்களை […]
- பொது அறிவு வினா விடைகள்
- இன்று அணுக்கரு ஆய்வின் ராணி சியான்-ஷீங் வு பிறந்த தினம்யுரேனியம் அணுவிலிருந்து ஐசோடோப்புகளை வாயுப்பரவல் முறையில் பிரித்தெடுத்த அணுக்கரு ஆய்வின் ராணி, நோபல் பரிசு பெற்ற […]
- டிஎன்பிஎல் நிறுவனத்தில் இரண்டாண்டு பயிற்சி வகுப்பு..!டிஎன்பிஎல் நிறுவனத்தில் இரண்டாண்டு பயிற்சி வகுப்பில் சேர ஜூன் 9 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் […]
- குறள் 444தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்வன்மையு ளெல்லாந் தலை.பொருள் (மு.வ): தம்மைவிட (அறிவு முதலியவற்றால்) பெரியவர் தமக்குச் […]