• Wed. Sep 9th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

தினம் ஒரு திருக்குறள்

  • Home
  • குறள் 538:

குறள் 538:

புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது இகழ்ந்தார்க்கு எழுமையும் இல். பொருள் (மு.வ): சான்றோர் புகழ்ந்து சொல்லியச் செயல்களைப் போற்றிச் செய்யவேண்டும், அவ்வாறு செய்யாமல் மறந்து சோர்ந்தவர்க்கு ஏழுப் பிறப்பிலும் நன்மை இல்லை.

குறள் 536:

இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமைவாயின் அதுவொப்பது இல். பொருள் (மு.வ): யாரிடத்திலும் எக்காலத்திலும் மறந்தும் சோர்ந்திருக்காதத் தன்மை தவறாமல் பொருந்தியிருக்குமானால், அதற்கு ஒப்பான நன்மை வேறொன்றும் இல்லை.

குறள் 535:

முன்னுறக் காவாது இழுக்கியான் தன்பிழைபின்னூறு இரங்கி விடும். பொருள் (மு.வ): வரும் இடையூறுகளை முன்னே அறிந்துக் காக்காமல் மறந்து சோர்ந்தவன், பின்பு அவை வந்துற்றபோது தன் பிழையை நினைத்து இரங்குவான்.

குறள் 534

அச்ச முடையார்க்கு அரணில்லை ஆங்கில்லைபொச்சாப் புடையார்க்கு நன்கு பொருள் (மு.வ): உள்ளத்தில்‌ அச்சம்‌ உடையவர்க்குப்‌ புறத்திலே அரண்‌ இருந்தும்‌ பயன்‌ இல்லை; அதுபோல்‌ மறதி உடையவர்க்கு நல்ல நிலை வாய்த்தும்‌ பயன்‌ இல்லை.

குறள் 533

பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அதுஉலகத்துஎப்பால்நூ லோர்க்கும் துணிவு பொருள் (மு.வ): மறதியால்‌ சோர்ந்து நடப்பவர்க்குப்‌ புகழுடன்‌ வாழும்‌ தன்மையில்லை; அஃது உலகத்தில்‌ எப்படிப்பட்ட நூலோர்க்கும்‌ ஒப்பமுடிந்த முடிபாகும்‌.

குறள் 532

பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினைநிச்ச நிரப்புக்கொன் றாங்கு பொருள் (மு.வ): நாள்தோறும்‌ விடாமல்‌ வரும்‌ வறுமை அறிவைக்‌ கொல்வதுபோல, ஒருவனுடைய புகழை அவனுடைய மறதி கொன்றுவிடும்‌.

குறள் 531

இறந்த வெகுளியின் தீதே சிறந்தஉவகை மகிழ்ச்சியிற் சோர்வு பொருள் (மு.வ): பெரிய உவகையால்‌ மகிழ்ந்திருக்கும்போது மறதியால்‌ வரும்‌ சோர்வு, ஒருவனுக்கு வரம்பு கடந்த சினம்‌ வருவதைவிடத்‌ தீமையானதாகும்‌.

குறள் 530

உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன் இழைத்திருந்து எண்ணிக் கொளல் பொருள் (மு .வ): தன்னிடமிருந்து பிரிந்து சென்று ஒரு காரணம்பற்றித்‌ திரும்பி வந்தவனை, அரசன்‌, அவன்‌ நாடிய உதவியைச்‌ செய்து ஆராய்ந்து உறவு கொள்ளவேண்டும்‌.

குறள் 529

தமராகிக் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக்காரணம் இன்றி வரும் பொருள் (மு.வ): முன்‌ சுற்றத்தாராக இருந்து பின்‌ ஒரு காரணத்தால்‌ பிரிந்தவரின்‌ உறவு, அவ்வாறு அவர்‌ பொருந்தாமலிருந்த காரணம்‌ நீங்கியபின்‌ தானே வந்து சேரும்‌.

குறள் 528

பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்அதுநோக்கி வாழ்வார் பலர் பொருள் (மு.வ): அரசன் எல்லாரையும் பொதுவாக நோக்காமல், அவரவர் சிறப்புக்கு ஏற்றவாறு நோக்கினால் அதை விரும்பிச்‌ சுற்றமாக வாழ்கின்றவர்‌ பலர்‌ ஆவர்‌.