• Wed. Sep 9th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

தினம் ஒரு திருக்குறள்

  • Home
  • குறள் 548

குறள் 548

எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்தண்பதத்தான் தானே கெடும் பொருள் (மு.வ): எளிய செல்வ உடையவனாய்‌ ஆராய்ந்து நீதிமுறை செய்யாத அரசன்‌ தாழ்ந்த நிலையில்‌ நின்று ( பகைவரில்லாமலும்‌) தானே கெடுவான்‌.

குறள் 548

எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்தண்பதத்தான் தானே கெடும் பொருள் (மு.வ): எளிய செல்வி உடையவனாய்‌ ஆராய்ந்து நீதிமுறை செய்யாத அரசன்‌ தாழ்ந்த நிலையில்‌ நின்று ( பகைவரில்லாமலும்‌) தானே கெடுவான்‌.

குறள் 546:

வேலன்று வென்றி தருவது மன்னவன் கோலதூஉங் கோடா தெனின். பொருள் (மு.வ): ஒருவனுக்கு வெற்றி பெற்றுத் தருவது வேல் அன்று, அரசனுடைய செங்கோலே ஆகும், அச் செங்கோலும் கோணாதிருக்குமாயின்.

குறள் 545:

இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்டபெயலும் விளையுளும் தொக்கு.பொருள் (மு.வ): நீதி முறைப்படி செங்கோல் செலுத்தும் அரசனுடைய நாட்டில் பருவ மழையும் நிறைந்த விளைவும் ஒருசேர ஏற்படுவனவாகும்.

குறள் 544

குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்அடிதழீஇ நிற்கும் உலகு பொருள் (மு.வ): குடிகளை அன்போடு அணைத்துக்‌ கொண்டு செங்கோல்‌ செலுத்துகின்ற அரசனுடைய அடியைப்‌ பொருந்தி உலகம்‌ நிலைபெறும்‌.

குறள் 543

அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்நின்றது மன்னவன் கோல் பொருள் (மு.வ): அந்தணர்‌ போற்றும்‌ மறைநூலுக்கும்‌ அறத்திற்கும்‌ அடிப்படையாய்‌ நின்று உலகத்தைக்‌ காப்பது அரசனுடைய செங்கோலாகும்‌.

குறள் 542

வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்கோல்நோக்கி வாழுங் குடி பொருள் (மு.வ): உலகத்தில்‌ உள்ள உயிர்கள்‌ எல்லாம்‌ மழையை நோக்கி வாழ்கின்றன. அது போல்‌ குடிகள்‌ எல்லாம்‌ அரசனுடைய செங்கோலை நோக்கி வாழ்கின்றனர்‌.

குறள் 541

ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்தேர்ந்துசெய் வஃதே முறை பொருள் (மு.வ): யாரிடத்திலும்‌ (குற்றம்‌ இன்னதென்று) ஆராய்ந்து, கண்ணோட்டம்‌ செய்யாமல்‌ நடுவுநிலைமை பொருந்தி (செய்யத்தக்கதை) ஆராய்ந்து செய்வதே நீதிமுறையாகும்‌.

குறள் 540:

உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான் உள்ளியது உள்ளப் பெறின் பொருள் (மு.வ): ஒருவன் எண்ணியதை விடாமல் எண்ணி (சோர்வில்லாமல்) இருக்கப் பெற்றால், அவன் கருதியதை அடைதல் எளிதாகும்.

குறள் 539:

இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாந்தம்மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து. பொருள் (மு.வ): தாம் தம் மகிழ்ச்சியால் செருக்குக் கொண்டு கடமையை மறந்திருக்கும் போது, அவ்வாறு சோர்ந்திருந்த காரணத்தால் முற்காலத்தில் அழிந்தவரை நினைக்க வேண்டும்.