• Wed. Sep 9th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

தினம் ஒரு திருக்குறள்

  • Home
  • குறள் 527:

குறள் 527:

காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும் அன்னநீ ரார்க்கே உள. பொருள் (மு.வ): காக்கை (தனக்கு கிடைத்ததை) மறைத்து வைக்காமல் சுற்றத்தைக் கூவி அழைத்து உண்ணும். ஆக்கமும் அத்தகைய இயல்பு உடையவர்க்கே உண்டு.

குறள் 526:

பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின்மருங்குடையார் மாநிலத்து இல். பொருள் (மு.வ): பெரிய கொடையாளியாகவும் சினமற்றவனாகவும் ஒருவன் இருந்தால் அவனைப் போல் சுற்றத்தாரை உடையவர் உலகத்தில் யாரும் இல்லை.

குறள் 525:

கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கியசுற்றத்தால் சுற்றப் படும். பொருள் (மு.வ):பொருள் கொடுத்தலும் இன்சொல் கூறுதலுமாகிய இரண்டும் செய்யவல்லவனானால் ஒருவன் தொடர்ந்த பலச் சுற்றத்தால் சூழப்படுவான்.

குறள் 524:

விஷாசுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வந்தான் பெற்றத்தால் பெற்ற பயன். பொருள் (மு.வ): தக்கவழியில் செய்யப்படாத முயற்சி பலர் துணையாக நின்று(அதை முடிக்குமாறு) காத்த போதிலும் குறையாகிவிடும்.

குறள் 523:

அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்கோடின்றி நீர்நிறைந் தற்று.பொருள் (மு.வ): சுற்றத்தாரோடு மனம் கலந்து பழகும் தன்மை இல்லாதவனுடைய வாழ்க்கை, குளப்பரப்பானது கரையில்லாமல் நீர் நிறைந்தாற் போன்றது.

குறள் 522

விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறாஆக்கம் பலவும் தரும் பொருள் (மு.வ): அன்பு நீங்காத சுற்றம்‌ ஒருவனுக்குக்‌ கிடைத்தால்‌, அது மேன்மேலும்‌ வளர்ச்சி குறையாத ஆக்கம்‌ பலவற்றையும்‌ அவனுக்குக்‌ கொடுக்கும்‌.

குறள் 521

பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்சுற்றத்தார் கண்ணே உள பொருள் (மு.வ): ஒருவன்‌ வறியவனான காலத்திலும்‌ அவனுக்கும்‌ தமக்கும்‌ இருந்த பழைய உறவைப்‌ பாராட்டிப்‌ பேசும்‌ பண்புகள்‌ சுற்றத்தாரிடம்‌ உண்டு.

குறள் 520

நாடோறும் நாடுக மன்னன் வினைசெய்வான்கோடாமை கோடா துலகு பொருள் (மு .வ): தொழில்‌ செய்கின்றவன்‌ கோணாதிருக்கும்‌ வரையில்‌ உலகம்‌ கெடாது; ஆகையால்‌ மன்னன்‌ நாள்தோறும்‌ அவனுடைய நிலைமையை ஆராய வேண்டும்‌.

குறள் 519

வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாகநினைப்பானை நீங்கும் திரு பொருள் (மு.வ): மேற்கொண்ட தொழிலில்‌ எப்போதும்‌ முயற்சி உடையவனின்‌ உறவைத்‌ தவறாக நினைக்கும்‌ தலைவனை விட்டுச்‌ செல்வம்‌ நீங்கும்‌.

குறள் 518

வினைக்குரிமை நாடிய பின்றை அவனைஅதற்குரிய னாகச் செயல் பொருள் (மு.வ): ஒருவன்‌ ஒரு தொழிலைச்‌ செய்வதற்கு உரியவனாக இருப்பதை ஆராய்ந்த பிறகு அவனை அத்‌ தொழிலுக்கு உரியவனாகும்படி உயர்த்தவேண்டும்‌.