• Thu. Apr 18th, 2024

தினம் ஒரு திருக்குறள்

  • Home
  • குறள் 651

குறள் 651

துணைநலம் ஆக்கம் தரூஉம் வினைநலம்வேண்டிய எல்லாந் தரும் பொருள்(மு.வ): ஒருவனுக்கு வாய்ந்த துணையின்‌ நன்மை ஆக்கத்தைக்‌ கொடுக்கும்‌; செய்யும்‌ வினையின்‌ நன்மை அவன்‌ விரும்பிய எல்லாவற்றையும்‌ கொடுக்கும்‌.

குறள் 649

பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்றசிலசொல்லல் தேற்றா தவர் பொருள் (மு.வ): குற்றமற்றவையாகிய சில சொற்களைச்‌ சொல்லத்‌ தெரியாதவர்‌, உண்மையாகவே பல சொற்களைச்‌ சொல்லிக்‌ கொண்டிருக்க விரும்புவர்‌.

குறள் 650

இணர்ஊழ்த்தும் நாறா மலரனையர் கற்றதுஉணர விரித்துரையா தார் பொருள் (மு.வ): தாம்‌ கற்ற நூற்பொருளைப்‌ பிறர்‌ உணருமாறு விரித்துரைக்க முடியாதவர்‌, கொத்தாக மலர்ந்திருந்த போதிலும்‌ மணம்‌ கமழாத மலரைப்‌ போன்றவர்‌.

குறள் 648

விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிதுசொல்லுதல் வல்லார்ப் பெறின் பொருள் (மு .வ): கருத்துக்களை ஒழுங்காகக்‌ கோத்து இனிமையாகச்‌ சொல்ல வல்லவரைப்‌ பெற்றால்‌, உலகம்‌ விரைந்து அவருடைய ஏவலைக்‌ கேட்டு நடக்கும்‌.

குறள் 647

சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனைஇகல்வெல்லல் யார்க்கும் அரிது பொருள் (மு.வ): தான்‌ கருதியவற்றை நன்கு சொல்ல வல்லவனாய்‌, சொல்லும்‌ போது சோர்வு இல்லாதவனாய்‌, அஞ்சாதவனாய்‌ உள்ளவனை மாறுபாட்டால்‌ வெல்வது யார்க்கும்‌ முடியாது.

குறள் 646

வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல்மாட்சியின் மாசற்றார் கோள் பொருள் (மு.வ): பிறர்‌ விரும்பும்‌ படியாகத்‌ தாம்‌ சொல்லி, பிறர்‌ சொல்லும்‌ போது அச்சொல்லின்‌ பயனை ஆராய்ந்து கொள்ளுதல்‌ மாசற்ற சிறப்புடையவரின்‌ கொள்கையாகும்‌.

குறள் 645

சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லைவெல்லுஞ்சொல் இன்மை அறிந்து பொருள்(மு.வ): வேறொரு சொல்‌ அந்தச்‌ சொல்லை வெல்லும்‌ சொல்லாக இல்லாதிருத்தலை அறிந்த பிறகே சொல்லக்‌ கருதியதைச்‌ சொல்லவேண்டும்‌.

குறள் 644

திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்பொருளும் அதனினூஉங்கு இல் பொருள்(மு.வ): சொல்லின்‌ திறத்தை அறிந்து சொல்லை வழங்க வேண்டும்‌; அத்தகைய சொல்வன்மையைவிடச்‌ சிறந்த அறமும்‌ பொருளும்‌ இல்லை.

குறள் 643

கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்வேட்ப மொழிவதாம் சொல் பொருள்(மு.வ): சொல்லும்போது கேட்டவரைத்‌ தன்‌ வயப்படுத்தும்‌ பண்புகளுடன்‌, கேட்காதவரும்‌ கேட்க விரும்புமாறு கூறப்படுவது சொல்வன்மையாகும்.

குறள் 642

ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால்காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு பொருள் (மு .வ): ஆக்கமும்‌ கேடும்‌ சொல்கின்ற சொல்லால்‌ வருதலால்‌ ஒருவன்‌ தன்னுடைய சொல்லில்‌ தவறு நேராமல்‌ காத்துக்‌ கொள்ள வேண்டும்‌.