• Fri. Apr 26th, 2024

தினம் ஒரு திருக்குறள்

  • Home
  • குறள் 645

குறள் 645

சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லைவெல்லுஞ்சொல் இன்மை அறிந்து பொருள்(மு.வ): வேறொரு சொல்‌ அந்தச்‌ சொல்லை வெல்லும்‌ சொல்லாக இல்லாதிருத்தலை அறிந்த பிறகே சொல்லக்‌ கருதியதைச்‌ சொல்லவேண்டும்‌.

குறள் 644

திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்பொருளும் அதனினூஉங்கு இல் பொருள்(மு.வ): சொல்லின்‌ திறத்தை அறிந்து சொல்லை வழங்க வேண்டும்‌; அத்தகைய சொல்வன்மையைவிடச்‌ சிறந்த அறமும்‌ பொருளும்‌ இல்லை.

குறள் 643

கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்வேட்ப மொழிவதாம் சொல் பொருள்(மு.வ): சொல்லும்போது கேட்டவரைத்‌ தன்‌ வயப்படுத்தும்‌ பண்புகளுடன்‌, கேட்காதவரும்‌ கேட்க விரும்புமாறு கூறப்படுவது சொல்வன்மையாகும்.

குறள் 642

ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால்காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு பொருள் (மு .வ): ஆக்கமும்‌ கேடும்‌ சொல்கின்ற சொல்லால்‌ வருதலால்‌ ஒருவன்‌ தன்னுடைய சொல்லில்‌ தவறு நேராமல்‌ காத்துக்‌ கொள்ள வேண்டும்‌.

குறள் 641

நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம்யாநலத்து உள்ளதூஉம் அன்று பொருள் (மு.வ): நாவன்மையாகிய நலம்‌ ஒருவகைச்‌ செல்வம்‌ ஆகும்‌; அந்த நாநலம்‌ தனிச்சிறப்புடையது. ஆகையால்‌ மற்ற எந்த நலங்களிலும்‌ அடங்குவது அன்று.

குறள் 640

முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர்திறப்பாடு இலாஅ தவர் பொருள் (மு.வ): (செயல்களை முடிக்கும்‌) திறன்‌ இல்லாதவர்‌, முன்னே முறையாக எண்ணி வைத்திருந்தும்‌ (செய்யும்போது) குறையானவைகளையே செய்வர்‌.

குறள் 639

பழுதெண்ணும் மந்திரியின் பக்கததுள் தெவ்வோர்எழுபது கோடி உறும் பொருள் (மு .வ): தவறான வழியை எண்ணிக்‌ கூறுகின்ற அமைச்சனை விட எழுபது கோடி பகைவர்‌ பக்கத்தில்‌ இருந்தாலும்‌ நன்மையாகும்‌.

குறள் 638

அறிகொன்று அறியான் எனினும் உறுதிஉழையிருந்தான் கூறல் கடன் பொருள்(மு.வ): அறிவுறுத்துவாரின்‌ அறிவையும்‌ அழித்துத்‌ தானும்‌ அறியாதவனாக அரசன்‌ இருந்தாலும்‌, அமைச்சன்‌ அவனுக்கு உறுதியானவற்றை எடுத்துக்கூறுதல்‌ கடமையாகும்‌.

குறள் 637

செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்துஇயற்கை அறிந்து செயல் பொருள்(மு.வ): நூலறிவால்‌ செயலைச்‌ செய்யும்‌ வகைகளை அறிந்த போதிலும்‌ உலகத்தின்‌ இயற்கையை அறிந்து அதனோடு பொருந்துமாறு செய்ய வேண்டும்‌.

குறள் 636

மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம்யாவுள முன்நிற் பவை பொருள் (மு.வ): இயற்கையான நுட்ப அறிவை நூலறிவோடு ஒருங்கே உடையவர்க்கு மிக்க நுட்பமான சூழ்ச்சிகளாய்‌ முன்‌ நிற்பவை எவை உள்ளன?