• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

முதியோர் உதவித்தொகை வீடு தேடி வழங்கப்படுமா?

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதியவர்கள் முதியோர் ஓய்வூதிய உதவித்தொகை ஆயிரம் ரூபாய் சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா மஞ்சூர்,மஞ்சூர் தபால் நிலையம் மூலமாக மாதந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது.
வயது மூப்பின் காரணமாக ஏராளமான முதியவர்கள் உதவித்தொகை பெறுவதற்காக வாகனங்களிலோ அல்லது நடந்தே மஞ்சூர் பகுதிக்கு வந்து வங்கியில் பணம் பெற்று செல்கின்றனர் அவ்வாறு வரும் முதியவர்கள் வங்கியிலும் தபால் நிலையங்களிலும் நீண்ட நேரம் காத்திருந்து பணம் பெற்று செல்கின்றனர் கடந்த சில நாட்களுக்கு முன்பாக சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் முதியவர்கள் பணம் பெற்று வந்த நிலையில் தற்போது முதியவர்களுக்கு தபால் நிலையத்தில் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது.இதனால் உதவித்தொகை பெற்று வரும் முதியவர்கள் விதவைகள் சில நபர்களுக்கு உதவித்தொகை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.அவர்கள் வங்கிக்கும் வட்டாட்சியர் அலுவலகத்திற்கும் அலைந்து வருகின்றனர்.மஞ்சூர் பெரியார் நகர் பகுதியில் வசித்து வரும் லட்சுமி வயது 90 என்ற முதியவருக்கு கடந்த இரண்டு மாதங்களாக உதவித்தொகை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதால் அந்த மூதாட்டி வங்கிக்கும் வட்டாட்சியர் அலுவலகத்திற்கும் நடந்து வருகிறார்.எந்த காரணத்திற்காக உதவித்தொகை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது என தெரியாமல் தவித்து வருவதும் காண முடிகிறது. அதே போன்று சில முதியவர்கள் குச்சிகளை ஊன்றியவாறு உதவித்தொகை பெறுவதற்கு வருவதையும் காண முடிகிறது.முதியோர் உதவித்தொகை இல்லத்திற்கே சென்று வழங்கினால் முதியவர்கள் அலைக்கழிக்கப்படுவது தடுக்கப்படும்.அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உதவி தொகை வீட்டிற்கு சென்று வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அஇஅதிமுக கீழ்குந்தா பேரூராட்சி செயலாளர் சிவராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.