பாஜக மதவாத கட்சி இல்லை. எங்களுக்கு முருகனும் வேண்டும் அல்லாவும் வேண்டும் இயேசுவும் வேண்டும் என மதுரை வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பாஜகவின் தமிழக தலைவர் அண்ணாமலை பேச்சு.
மதுரையில் பாஜக சார்பாக மாநகராட்சி, பேரூராட்சியில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் அறிமுக கூட்டம் மதுரை பழங்காநத்தம் சந்திப்பில் பாஜக மாநகர் மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்று வேட்பாளர்களை அறிமுகம் செய்து மதுரைக்கான தேர்தல் அறிக்கையை மதுரை மாநகர தலைவர் டாக்டர் சரவணன் வழங்க அதனை வெளியிட்டார்.
பின் மேடையில் பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை:
8 மாத கால திமுகவின் ஆட்சி 80 ஆண்டு காலம் ஆட்சி செய்தது போல மக்களுக்கு சலிப்பை கொடுத்துள்ளது. திமுக அரசு தேர்தலின் போது 518 வாக்குறுதிகள் வழங்கியது ஆனால் அதில்
7 வாக்குறுதியை கூட நிறைவேற்றவில்லை.
திமுக அரசு வெஜ் , நான் வெஜ் பொங்கல் தொகுப்பு வழங்கியது. பொங்கல் தொகுப்பில் பாம்பு, பல்லி என பல விஷப் பூச்சிக்கள் இருந்தது.
பொங்கல் தொகுப்புக்கான
கரும்பு விவசாயிகளிடம் இருந்து 25 ரூபாய்க்கு என
மொத்தமாக 2 கோடி15 லட்சம் வாங்கி. அதனை ரேசன் கடைக்கு கரும்பு 40 ரூபாய்க்கு விற்பனை செய்தவர்கள் திமுக மாவட்ட செயலாளர்கள்.
கரும்பில் மட்டும் திமுக அரசு 33 கோடி கமிசன் அடித்துள்ளது. மஞ்சள் பை ஒன்று 60 ரூபாய்க்கு வாங்கி தமிழ்நாடு அரசு
கின்னஸ் சாதனை செய்து உள்ளது. பொங்கல் தொகுப்பின் விலையைவிட மஞ்சள் பை விலைதான் அதிகம். 73% பேருக்கு கூட்டுறவு நகை கடன் தள்ளுபடி செய்ய முடியாது என அரசு அறிவித்துள்ளது.
நீட் தேர்வுக்கு விலக்கு கோரி 12 மாநில முதல்வர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார். எந்த முதல்வரும் பதில் கடிதம் எழுதவில்லை உங்கள் மானம் போகிறது. நம் மானத்தையும் ஏன் சேர்த்து வாங்குகிறீகள் என கேள்வி எழுப்பினார்.
இந்தியா முழுவதும் உள்ள 37 தலைவர்களுக்கு சமூக நீதி கூட்டமைப்பு தொடர்பாக கடிதம் எழுதினார். துணை பிரதமராக மாற வேண்டும் என ஸ்டாலின் ஆசைபடுகிறார்.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது 50 மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. மேலும் 22 ஆயிரம் பேருக்கு நேரடியாக வேலை வாய்ப்பு கிடைக்கும். கொரோனாவில் 30 கோடி பேர் இறப்பார்கள் என காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி கூறிவிட்டி நைஸாக இத்தாலி சென்றார்.
நீட் தேர்வை கொண்டுவந்தது காங்கிரஸ், திமுக தான் அதனை நடைமுறைப்படுத்தியது தான் பாஜக.
*இந்தியைத் திணித்தால் பாஜக எதிர்ப்போம் இந்தியைத் திணித்தது காங்கிரஸ் தான் நாள்தோறும் காலை முதல் இரவு வரை திமுகவினர் மோடியை பற்றியும் பாஜக பற்றியும் பொய் பேசி வருகின்றனர்.
நீங்கள் முழித்துக் கொண்டு விட்டீர்கள் அதனால்தான் திமுகவிற்கு ஆட்சி பயம் வந்துவிட்டது.
பாஜக மதவாத கட்சி, இந்துக்களுக்கான கட்சியினர் கூறி வருகின்றனர் ஆனால் பாஜக சார்பாக முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், திருநங்கைகள் வேட்பாளராக களமிறங்கி உள்ளோம. எங்களுக்கு மதம், பாலின பாகுபாடு கிடையாது.
எங்களுக்கு
முருகனும் வேண்டும் அல்லாவும் வேண்டும் இயேசுவும் வேண்டும்… மதத்தை வைத்து அரசியல் செய்வது நாங்கள் இல்லை.
*தமிழகத்தில் பாஜக ஒருபோதும் ஆட்சிக்கு வராது என ராகுல் சொன்னார். அதை கேட்டவுடன் நான் லட்டு வாங்கி வர கட்சியினரிடம் சொன்னேன்.
ராகுல் காந்தி குஜராத் முதல்வராக மோடி வரமாட்டார் என்று கூறிய பொழுது முதல்வரானார், பிரதமர் ஆக மாட்டார் என்று கூறிய பொழுது பிரதமரானார்.
ராகுல் காந்தி சொன்னாலே அவர்களுக்கு சுக்கிரன் திசை அதிகமாகும். அவர் சொன்ன மறுநாளே இராமநாதபுரம் கமுதி 14 வார்டில் போட்டியின்றி பாஜக தேர்வானது. அதற்கு மறுநாள் நாகர்கோவிலில் 2 வார்டுகள் என பாஜக போட்டியின்றி வென்றனர் என்று பேசினார்.
- நாளை பாரத் பந்த்..??? வெளியான அறவிப்பு…ஓபிசி சமூகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு மத்திய அரசை வலியுறுத்தி நாளை நாடு முழுவதும் போராட்டம் […]
- அப்பாவை சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்து செல்கிறோம்… நடிகர் சிம்பு ட்வீட்மருத்துவ சிகிச்சைக்காக தந்தை டி. ராஜேந்தரை வெளிநாடு அழைத்துச் செல்வதாக நடிகர் சிம்பு அறிக்கை வெளியிட்டுள்ளார்.. […]
- கஞ்சா வியாபாரியின் சொத்துக்கள் முடக்கம்தேனி மாவட்டத்தில் கஞ்சாவிற்றவரின் சொத்துக்கள் மற்றும் வாகனங்களை முடக்க உத்தரவுதேனி மாவட்டம் கடமலைக்குண்டு வட்டம் மயிலாடும்பாறைச் […]
- மாநிலங்களவை எம்.பி. வேட்பாளர் தேர்தல்-அதிமுகவில் இழுபறிமாநிலங்களவை எம்.பி வேட்பாளர் தேர்தலில் வேட்பாளர்களை தேர்வு செய்வதில்அதிமுகவில் தொடர்ந்து இழுபறி நீடித்திவருகிறது.பாராளுமன்ற மேல்சபைக்கு தமிழகத்தில் […]
- மேயர்… வந்தார், நின்றார், சென்றார்… புஷ்ஷாகி
போன மக்கள் குறைதீர் கூட்டம். மனு அளிக்க வந்தவர்கள் ஏமாற்றம்.மதுரை மாநகராட்சியில் நடைபெற்ற குறைதீர்சிறப்பு முகாமிற்கு வந்த மேயர் இடையிலேயே சென்றுவிட்டதால் பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனர்.மதுரை மாநகராட்சி […] - பக்தர்கள் மீது தாக்குதல்-கோயில்அர்ச்சகர் அராஜகம்இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மதுரை தல்லாகுளம் அருள்மிகு ஐய்யப்பன் கோவில்( அர்ச்சகர் மாரிசாமியின் […]
- மதுரை மேயர் தலைமையில் குறைதீர் சிறப்பு முகாம்மதுரை மேயர் தலைமையில் குறைதீர் சிறப்பு முகாம் ஏராளமான பொதுமக்கள் மனுக்களுடன் குவிந்த பொதுமக்கள்மதுரை மாநகராட்சி […]
- ஆபாச போஸ்டர்- மக்கள் நீதிமய்ய கட்சியினர் மீது வழக்குமதுரையில் ஆபாச வார்த்தைகள் இடம்பெற்ற போஸ்டரால் மக்கள் நீதி மய்ய கட்சியினர் மீது இரண்டு காவல்நிலையங்களில் […]
- ஒரு லிட்டர் பெட்ரோல் வெறும் 1 ரூபாய் தான்…வெனிசுலா நாட்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்வது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் […]
- உலக பொருளாதார கூட்டமைப்பு மாநாட்டில் இந்தியாவுக்கு புகழாரம்…சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் உலக பொருளாதார கூட்டமைப்பு மாநாடு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று ஒரு […]
- பிரதமர் மோடி நாளை மறுநாள் சென்னை வருகைநாளை மறுநாள் சென்னைக்கு வருகை தரும் பிரதமர் மோடிக்கு 5 அடுக்கு பாதுகாப்பு உள்ளிட்ட ஏற்பாடுகள் […]
- கோவில் விழாவில் ஆடல், பாடலில் ஆபாசம் கூடாது… உயர்நீதிமன்ற மதுரை கிளைகோவில் விழாவில் இடம்பெறும் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளில் ஆபாசம் கூடாது என்று உயர் நீதிமன்ற மதுரை […]
- இலங்கையில் அதிர்ச்சி தரும் பெட்ரோல் விலை உயர்வுஇலங்கையில் அதிர்ச்சியளிக்கும் வகையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை வரலாறு காணாத உயர்ந்துள்ளது.இலங்கையில் டாலரும் இல்லை,ரூபாயும் […]
- பலாக்கொட்டை பொடிமாஸ்தேவையானவை:பலாக்கொட்டை – 200 கிராம், இஞ்சி – ஒரு சிறிய துண்டு, பச்சை மிளகாய் – […]
- 2 ஆண்டுகளுக்கு பிறகு கொடைக்கானலில் கோடை விழா2 ஆண்டுகளுக்கு பிறகு கொடைக்கானல் கோடை விழாவின் முக்கிய நிகழ்வான மலர்கண்காட்சியை அமைச்சர் ஐ. பெரியசாமி […]