திருச்சியில் பாஜக நிர்வாகி ஒருவர் ராமர் கோவில் திறப்பு விழாவின் போது சமூக வலைத்தளங்களில் அவதூறு கருத்துகளை பதவிட்டதாற்காக அவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
திருச்சியைச் சேர்ந்த பாஜக மாநில நிர்வாகியை போலீசார் அதிகாலையில் கைது செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜக தகவல் தொழில்நுபட்பத்துறையின் (ஐடி விங்) மாநிலச் செயலாளராக பணியாற்றி வருபவர் புகழ். இவர் ராமர் கோவில் திறப்பு நேரத்தின் போது சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துக்களை பதிவிட்டதாக கூறி கைது செய்யப்பட்டுள்ளார்.
கலவரத்தை தூண்டுதல், மத ரீதியான வெறுப்பை விதைத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் புகழ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.