கோவையில் குழந்தைகளுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், குட்டி ரோடீஸ் என்ற பெயரில் சைக்கிள் பேரணி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகள் மத்தியில் சாலை பாதுகாப்பு குறித்த எண்ணங்களை வளர்த்தால் சாலை பாதுகாப்பு குறித்த புரிதல் கொண்ட வலுவான சமுதாயத்தை உருவாக்க முடியும் என்ற முனைப்புடன் கோயம்புத்தூர் யுனைட்டர் ரவுண்டேபிள் 186 என்ற அமைப்பு ‘குட்டி ரோடீஸ்’ என்ற சைக்கிள் பேரணியை கடந்த 2019ம் ஆண்டு நடத்தியது. கோயம்புத்தூர் யுனைட்டர் ரவுண்டேபிள் 186 என்ற அமைப்பானது கடந்த 17 ஆண்டுகளாக செயல்படுகிறது. இந்த அமைப்பானது அரசுப் பள்ளிகளுக்கு வகுப்பறைகள் அமைத்துக் கொடுப்பது, கிராமப்புறங்களில் மருத்துவ முகாம்கள் அமைத்தல், இயற்கை சீற்றங்களின் போது மக்களுக்கு உதவுதல், சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த சூழலில், கணுவாய் மற்றும் காரமடை ஆகிய பகுதிகளில் 4 வகுப்பறைகள் கட்டப்பட உள்ளது. இதற்கு நிதி திரட்டும் நோக்கிலும், குழந்தைகள் மத்தியில் சாலை பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கிலும் இந்தாண்டு குட்டி ரோடீஸ் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. இதில் ஒன்றாம் வகுப்பு முதல் 7ம் வகுப்பு வரை உள்ள சிறுவர்கள் கலந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய கோயம்புத்தூர் யுனைட்டெட் ரவுண்ட் டேபிள் அமைப்பின் தலைவர் ராகுல், இந்த ஆண்டு வரும் ஜூன் மாதம் 18ம் தேதி குட்டி ரோடீஸ் நிகழ்ச்சி நடைபெறுகிறது. காலை 6 மணி முதல் 11 மணி வரை கொடீசியா மைதானத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது. குழந்தைகள் சைக்கிள் ஓட்டுவது தான் அவர்கள் சாலை விதிமுறைகள் குறித்து அறிந்து கொள்ளும் முதல்படி என்பதால் இந்த நிகழ்ச்சியில் அனைத்து குழந்தைகளும் வயதுக்கு ஏற்ப சைக்கிளிங் செல்வார்கள். 500 மீட்டர் முதல் 5 கிலோ மீட்டர் வரை சைக்கிளிங் செல்வதற்கான பிரிவுகள் உள்ளன.
இதில் பங்கேற்கும் குழந்தைகளுக்கு காலை உணவு, டீ சர்ட், மெடல், சான்றிதழ் மற்றும் சைக்கிளிங் ஹெல்மெட் கொடுக்கிறோம். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க இணையதளம் மூலமாக முன்பதிவு செய்து கொள்ளலாம். பதிவு கட்டணமாக ரூ.749 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல், மோசமான நிலையில் உள்ள அரசு பள்ளிகளை மேம்படுத்துதல் என்ற இரண்டு நல்ல காரணங்களுக்காக இந்த நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளதாக தெரிவித்தார்.
குட்டி ரோடீஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்புவோர் www.kuttiroadies.com என்ற இணையதளம் மூலமாக முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- முடி சூட்டும் விழா முடிந்தது.. மக்களின் குரல்களை நசுக்கும் பணி தொடங்கியது.. ராகுல் காந்திமல்யுத்த வீரர் வீராங்கனைகள் கைதுக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்பாஜக […]
- செங்கோல் முதல் நாளே வளைந்துவிட்டது -முதல்வர் மு .க ஸ்டாலின்.மல்யுத்த வீராங்கனைகள் மீது தாக்குதல் செங்கோல் முதல் நாளே வளைந்துவிட்டது என்பதையே இது காட்டுகிறது. என […]
- பேப்பர் மற்றும் மை விலையை கட்டுப்படுத்த வேண்டும்- மதுரை பிரிண்டர்ஸ் அசோசியேஷனின் தீர்மானம்கடுமையாக உயர்ந்து கொண்டிருக்கும் பேப்பர் மற்றும் மை விலையிணை மத்திய மாநில அரசுகள் உடனடியாக கட்டுப்படுத்த […]
- புது நாடாளுமன்றம் திறக்கும் நாளில் நிலநடுக்கத்தால் குலுங்கிய தலைநகர் டெல்லிவரலாற்றுச் சிறப்புமிக்க புதிய நாடாளுமன்ற கட்டிடத்தைப் பிரதமர் மோடி திறந்து வைத்த நிலையில், இன்று டெல்லி […]
- ரூ.75 நாணயம் கருப்பு நிறமாக இருப்பது ஏன்?இந்திய நாடாளுமன்றத்தின் படம் மற்றும் அசோக சின்னம் இரண்டும் அடங்கிய வகையில் இந்த நாணயம் உருவாக்கப்பட்டு […]
- முதல் நாளே பிரச்சனை-புதிய நாடாளுமன்றம் நோக்கி பேரணி சென்ற மல்யுத்த வீராங்கனைகள் கைது
- உலகபட்டினி தினத்தை முன்னிட்டு விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக 1000 பேருக்கு மதிய உணவுஉலகபட்டினி தினத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 1000 பேருக்கு மதிய உணவு […]
- கத்திரி வெயில் இன்றுடன் நிறைவு!..வெயில் படிப்படியாக குறையும்தமிழகத்தில் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் இன்றுடன் நிறைவடைகிறது.வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் படிப்படியாக […]
- மருத்துவகல்லூரிகளுக்கான அங்கீகாரம் ரத்து-தமிழக அரசுக்கு ஓ.பி.எஸ் கண்டனம்மருத்துவக்கல்லூரிக்கான அங்கீராரம் ரத்து செய்யப்பட தி.மு.க. அரசின் மெத்தனப் போக்கிற்கு, அலட்சியப் போக்கே காரணம் என […]
- பத்திரிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுமனைப் பட்டா ரத்து -ஏற்புடையதல்ல! – எஸ்.டி.பி.ஐ.மதுரையில் அரசு ஒதுக்கீட்டில் பத்திரிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுமனைப் பட்டாவை ரத்து செய்த நடவடிக்கை ஏற்புடையதல்ல! – […]
- 2023 ஐபிஎல் திருவிழா இன்றுடன் நிறைவு..கோப்பையை வெல்லுமா சென்னை அணி?ஐபிஎல் போட்டியில் சென்னை மற்றும் குஜராத் அணிகள் இன்று இரவு மோதுகின்னறன. இன்றுடன் 2023 ஐபிஎல் […]
- மதுரையில் லஞ்சம் வாங்கிய வணிக வரி அதிகாரிகள் மீது வழக்குமதுரை பாண்டிகோவில் பகுதியில் லாரி டிரைவரிடம் லஞ்சம் வாங்கிய வணிக வரி அதிகாரிகள் மீது வழக்கு- […]
- ராஜபாளையத்தில் புதிய தமிழகம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்ராஜபாளையம் ஜவகர் மைதானம் எதிரே புதிய தமிழகம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் – மரக்காணம் கள்ளச்சாராய […]
- இன்று இந்திய இயற்பியலாளர், சிவராமகிருட்டிணன் பஞ்சரத்தினம் நினைவு நாள்பஞ்சரத்தினம் வடிவியல் கட்டம் எனும் படிக ஒளியியலில் நடைபெறும் விளைவினை கண்டறிந்த இந்திய இயற்பியலாளர், சிவராமகிருட்டிணன் […]
- கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் மாணவர்களுக்கு பாராட்டு விழாகலப்பை மக்கள் இயக்கம் சார்பில் 10,12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு […]