• Thu. Oct 16th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

இயேசு கிறிஸ்துவின் பரமேறுதல்

ByA.Tamilselvan

Dec 21, 2022

உயிர்த்தெழுந்து நாற்பது நாட்களுக்குப் பிறகு, இயேசுவும் அவருடைய சீஷர்களும் எருசலேமுக்கு அருகிலுள்ள ஒலிவ மலைக்குச் சென்றனர். அங்கு, சீஷர்கள் விரைவில் பரிசுத்த ஆவியைப் பெறுவார்கள் என்று இயேசு வாக்குறுதி அளித்தார், மேலும் ஆவியானவர் வரும் வரை எருசலேமில் இருக்கும்படி அவர்களுக்கு அறிவுறுத்தினார். பின்னர் இயேசு அவர்களை ஆசீர்வதித்தார், அவர் ஆசி வழங்கியபோது, எல்லோரும் பார்த்துக்கொண்டிருக்க அவர் பரலோகத்திற்கு ஏறிப்போகத் தொடங்கினார்.
இயேசுவின் பரமேறுதல் என்பது பரலோகத்திற்கு சரீரத்தில் ஏறிப்போவது என்பது வேதத்திலிருந்து மிகத்தெளிவாக விளங்குகிறது. அவர் படிப்படியாக மற்றும் வெளிப்படையாக தரையில் இருந்து உயரே எழும்பி பரலோகத்திற்கு ஏறிப்போனார், பலரும் அதை மிகவும் ஆர்வமாக பார்த்தனர். சீஷர்கள் இயேசுவின் இறுதிக் காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்தபோது, ஒரு மேகம் அவரை அவர்களின் பார்வையில் இருந்து மறைத்தது, அப்போது இரண்டு தேவதூதர்கள் தோன்றி, “உங்களிடத்தினின்று வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப்போனாரோ அப்படியே மறுபடியும் வருவார் என்றார்கள்”
இயேசு கிறிஸ்துவின் பரமேறுதல் பல காரணங்களுக்காக மிகவும் அர்த்தமுள்ளதாக இருக்கிறது:
அது அவருடைய பூமிக்குரிய ஊழியத்தின் முடிவைக் குறிக்கிறது. பிதாவாகிய தேவன் தனது குமாரனை பெத்லகேமில் அன்புடன் உலகிற்கு அனுப்பினார், இப்போது குமாரன் பிதாவிடம் திரும்பிச் செல்கிறார். அவரது மனித தன்மையின் வரம்பின் காலம் முடிவடைந்தது.
அது அவருடைய பூமிக்குரிய கிரியையில் வெற்றியைக் குறிக்கிறது. அவர் செய்ய வந்த அனைத்தையும் அவர் வெற்றிகரமாக செய்து முடித்தார்.
தற்போது, கர்த்தராகிய இயேசு பரலோகத்தில் இருக்கிறார். வேதம் அடிக்கடி அவரைப் பிதாவின் வலது பாரிசத்தில் இருப்பதாக சித்தரிக்கிறது. திருச்சபையில் தலையாக இருக்கிறார் ஆவிக்குரிய வரங்களை வழங்குபவராக இருக்கிறார் ( மற்றும் அனைத்தையும் நிரப்புபவர் கிறிஸ்துவின் பரமேறுதல் இயேசுவை அவரது பூமிக்குரிய ஊழியத்திலிருந்து அவருடைய பரலோக ஊழியத்திற்கு மாற்றிய நிகழ்வு ஆகும்.