கள்ளன் திரைப்பட விழாவில் பேசிய பிக்பாஸ் ஆரி, ப்ளூ சட்டை மாறனை திட்டி தீர்த்ததோடு எச்சரித்தும் அனுப்பினார்!
புதுமுக இயக்குனரான சந்திரா தங்கராஜ் எழுதி, இயக்கி வரும் படம் கள்ளன். எழுத்தாளரான சந்திரா, டைரக்டர் ராம் மற்றும் அமீரிடம் அசிஸ்டென்டாக பணியாற்றியவர். ஸ்ரீ மாசாணியம்மன் பிக்சர்ஸ் பேனரில் வி.மதியழகன் தயாரித்துள்ள இந்த படத்தில் கரு.பழனியப்பன், நித்தியா, மாயா, செளந்தர் ராஜன், நமோ நாராயணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு கே இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பிக்பாஸ் ஆரி கலந்து கொண்டார்! மேடையில் பேசிய ஆரி, முதலில் ப்ளூ சட்டை மாறனை பெயரை குறிப்பிடாமல் மறைமுகமாக குறிப்பிட்டு திட்டி தீர்த்தார். பிறகு ஒரு கட்டத்தில் ப்ளூ சட்டை மாறனின் பெயரை சொல்லி விட்டார். சூசகமாக சொல்லவில்லை. அவரை தான் சொல்கிறேன். எச்சரிக்கிறேன். ப்ளூ சட்டை மாறன் எங்கு இருந்து வந்தார். எப்படி வந்தார் என்பதை நினைத்து பார்க்க வேண்டிய தருணம். பரோட்டா மாவு பிசைஞ்ச மாதிரி மூஞ்சி என்று சொல்வதெல்லாம் மிக பெரிய வன்மம் என்றார் ஆரி.
அஜித் நடித்த வலிமை படத்தை மிக மோசமாக விமர்சித்திருந்தார் ப்ளூ சட்டை மாறன். படத்தை தாண்டி அஜித்தை உருவ கேலி செய்தும் விமர்சித்திருந்தார். இதனை பிரபலங்கள் பலரும் கண்டித்திருந்தனர். அஜித் ரசிகர்கள் பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

- மதுரையில் மருத்துவ சங்கங்கள் திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்!அரசாணை 225ஐ திரும்ப பெற வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம். தமிழகத்தில் ஆரம்ப […]
- திண்டுக்கல்லில் மருத்துவ சங்கம் ஆர்ப்பாட்டம்!விடியா தி மு க ஆட்சியில் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் பணி நேரத்தை ஒரு […]
- திண்டுக்கல்லில் திமுக பஞ்சாயத்து தலைவர் பொதுமக்களால் விரட்டி அடிப்பு!திண்டுக்கல் அருகே குடியிருப்பு பகுதிக்கு தண்ணீர் விடாமல் தனியார் கம்பெனிக்கு தண்ணீர் கொடுக்க முயற்சி செய்த […]
- பழனியில் தரிசனம் செய்த எடப்பாடி பழனிச்சாமி..இடைக்கால பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான […]
- ரம்மி ஆப்புகளை தடை செய்யக்கோரி தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் கோரிக்கைஇணையதளத்தில் உள்ள ஆன்லைன் ரம்மி ஆப்புகளை தமிழகஅரசு தடை செய்யக்கோரி மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் இடம் […]
- மதுரையில் சமூநீதி மாநாட்டில் முதல்வருக்கு கோரிக்கை..மதுரையில் நேற்று நடந்த சமூநீதி மாநாட்டில் இந்திய மத்திய மற்றும் மாநில அரசுகளின் பொதுக் கொள்கைத் […]
- விருதுநகர் சந்தையில் பருப்பு விலை உயர்வுகர்நாடக உள்ளிட்ட வெளி மாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக விருதுநகர் சந்தையில் பருப்பு விலை […]
- எம்ஜிஆர் – ஜெயலலிதா எண்ணம் உறுதியாக நிறைவேறும் -ஓபிஎஸ்அதிமுகவை மாபெரும் இயக்கமாக மாற்றிய எம்.ஜி.ஆர், ஜெயலலிதா எண்ணம் உறுதியாக நிறைவேறும் என மதுரை விமான […]
- மாநிலங்களவை இன்றுடன் நிறைவுமாநிலங்களவை அறிவிக்கப்பட்ட தேதிக்கு 4 நாட்கள் முன்னதாகவே நிறைவு பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மழைக்கால கூட்டத்தொடரின் மாநிலங்களவை இன்றுடன் […]
- பொறியியல் கலந்தாய்வு வரும் 25-ம் தேதி முதல் தொடங்கும் – அமைச்சர் பொன்முடிதமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வு வரும் 25ம் தேதி முதல் தொடங்கும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் […]
- சமூக சேவகர் ஆர்.வி. மகேந்திரன் –க்கு சிறந்த மக்கள் சேவைக்கான டாக்டர் பட்டம் …மக்கள் சேவையில் சிறப்பாக பணியாற்றயதற்காக மகேந்திரன் அவர்களுக்கு சிறந்த மக்கள் சேவைக்கான டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. […]
- சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு தேசியக்கொடி வழங்கிய அர்ஜூன் சம்பத்…சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சுவாமி தரிசனத்திற்காக வந்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் […]
- மதுரையில் சமூநீதி மாநாட்டில் முதல்வருக்கு கோரிக்கை..மதுரையில் நேற்று நடந்த சமூநீதி மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அரசு சமூகநீதியை உண்மையாக […]
- கருணாநிதியின் கொள்கைகளை அவரது பேரன் உதயநிதி கைவிட்டுவிட்டார் – அண்ணாமலைகருணாநிதி கொள்கையை கைவிட்ட அவரது பேரன் உதயநிதி ஸ்டாலின் அண்ணாமலை கிண்டல் டுவிட்டர்தமிழக பா.ஜனதா தலைவர் […]
- மாடுகளுக்கு ஏற்பட்டுள்ள வித்தியாசமான நோய்… உரிமையாளர்கள் அதிர்ச்சி!ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் மாடுகள் வித்தியாசமான நோயினால் பாதிக்கப்பட்டு இறந்து வரும் சம்பவம் அதிர்ச்சியை […]