திருவண்ணாமலை கோவிலில் கார்த்திகை தீபம் முடிந்தவுடன் மலை தீபம் ஏற்றுதல் நிறைவு பெற்றவுடன் காண கிடைக்காத மலையுச்சியில் உள்ள அண்ணாமலையானின் திருப்பாதத்துக்கு பிராயச்சித்த அபிஷேகம் நடக்கும்.
அதன்படி கோவிலில் 41 கலசங்கள் வைத்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு மலை உச்சிக்கு அந்த புனித நீர் எடுத்துச் செல்லப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டு கலச நீர் தெளிக்கப்பட்டது.