மாண்டஸ் புயல் காரணமாக அண்ணா பல்கலைக்கழக தேர்வு தேதிகள் வரும் 24,31ம் ஆகிய தேதிகளில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது, ஆனால் கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகைகள் அந்த தினங்களில் வருவதால் பண்டிகையை கொண்டாட மாணவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் என்பதை அறிந்த முன்னாள் அமைச்சரும், திமுக தணிக்கை குழு உறுப்பினருமான.சுரேஷ்ராஜன் உயர்கல்விதுறை அமைச்சர். பொன் முடியிடம் தெரிவித்தார், அதனை தொடர்ந்து தற்போது அந்த தேர்வானது ஜனவரி மாதம்24,31ம் தேதியில் மாற்றி வைக்கப்பட்டுள்ளது, இதற்கு முயற்சி செய்த முன்னாள் அமைச்சர். சுரேஷ்ராஜனை குமரி மாவட்ட பொறியியல் கல்லூரி மாணவிகள்,பேராசிரியர்கள் அவரது இல்லத்தில் சந்தித்து சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தனர்.
அண்ணா பல்கலைக்கழக தேர்வு தேதி மாற்றத்தால் மாணவர்கள் உற்சாகமடைந்தனர்.