தமிழகம் முழுவதும் 17 வயது நிறைவடைந்த வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் நவம்பரில் 12,13,26,27 தேதிகளில் வாக்காளர் பட்டியல் திருத்த பணி நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில் 17 வயதுடைய அனைவரும் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்கலாம் .அவர்கள் 18 வயதை அடைந்த பின் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.