நாளைய தினம் தவெ.க அரசின் விஜய் தலைமையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த பட்ஜெட்டில் முத்து முத்தாக அறிவிப்பு வெளிவருமா அல்லது எப்போதும் போல பஞ்ச் டயலாக் பேசி தமிழ்நாட்டு மக்களை பஞ்சராக்கப் போகிறதா என்பதுதான் இப்போதைய விவாதமாக இருக்கிறது

கடந்த ஆண்டில் வருவாய் பற்றாக்குறை ரூபாய் 78,534 கோடியாக இருந்தது. இது மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.22சதவீதம் ஆகும். இது அதிக வருவாய் பற்றாக்குறையாக கணிக்கப்படுகிறது தமிழகத்தின் மொத்த கடன் 10 லட்சம் 42 ஆயிரத்து 828 கேடியாக உள்ளது
இந்த நிலையில் விஜய் பதவி ஏற்பு விழாவில் அதை சுட்டிக்காட்டி மக்களிடத்திலே கடன் அளவு எச்சரிக்கையை செய்தியை வெளியிட்டிருக்கிறார் நாட்டிலே அதிக கடன் வாங்கிய மாநிலம் தமிழ்நாடு தான் என்பது, முதல்வர் விஜய்க்கு தெரியாது ஒன்றும் இல்லை அவர் தெரிந்துதான் தேர்தல் வாக்குறுதிகளை வாரி வழங்கினார்.

என்ன, என்ன தேர்தல் வாக்குறுதி வழங்கினார் என்பது மக்களுக்கு தெரியும் அதனால் இன்றைக்கு எதிர்பார்ப்பில் நிறைந்திருக்கிறது என்பதோடு , தேர்தலுக்கு முன்பாக விஜய் சொன்னார் நான் மற்ற அரசியல் கட்சித் தலைவர்களை போல வாக்குகளை பெறுவதற்காக சாத்தியமில்லாத திட்டங்களை, செயல்படுத்த முடியாத திட்டங்களை நான் வாக்குறுதியாக கொடுத்து மக்களை ஏமாற்ற மாட்டான் உங்கள் விஜய் என்று மிக ஆணித்தனமாக எல்லோர் மனதிலும் ஒரு நம்பிக்கை விதையை விதைத்தார் முதல்வர் விஜய்.
2026 -2027 நிதியாண்டில் வருவாய் பற்றாக்குறை சுமார் 90,500 கோடியாக உயரும் என்றும், நிதி பற்றாக்குறை ஒரு லட்சத்து 64 ஆயிரம் கோடி வரை உயரக்கூடும் என பொருளாதார வல்லுநர்கள் கணித்திருக்கிறார்கள் .
இப்போது த.வெ.கஅரசு இந்த மூன்று மாதத்தில் மட்டும் எந்த புதிய திட்டங்களை அறிவிக்காமல், 22,000 கோடி கடன் வாங்கி உள்ளதாகவும், இந்த ஆண்டு மட்டும் ஒரு லட்சத்து 22 ஆயிரம் கோடி கடன் வாங்க இலக்கு உள்ளதாகவும் செய்தி வெளியாகி இருக்கிறது .
இந்த நிலையிலே தான் அரசின் வருவாயை பெருக்கும் வழிமுறைகள் குறித்து ஆராய்ந்து பரிந்துரைக்க மத்திய திட்டக்குழுவின் முன்னாள் துணைத் தலைவரும், பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழுவில் முன்னாள் தலைவர் மாண்டெக்சிங் அலுவாலியா தலைமையிலே 6 நிபுணர்கள் குழு கொண்ட குழுவை அமைத்திருக்கிறது அரசு.கடந்த காலங்களிலும் இதே போன்று ஆட்சியாளர்கள் குழுவை அமைத்தார்கள் ஆனால் இந்தியாலயே கடன் வாங்கும் மாநிலமாக இருந்தது என்பதை முதல்வர் விஜய்க்கு நன்றாகத் தெரியும்
இப்போது த.வெ.க அரசின் வெள்ளை அறிக்கை நிதி அமைச்சர் மரிய வில்சன் வெளியிட்டு இருக்கிறார் அந்த வெள்ளை அறிக்கையில் நிதி நிலையில் உண்மை நிலையை எடுத்துச் சொல்வதாக சொல்லியிருக்கிறார்.

ஓட்டு வாங்குவதற்காக சாத்தியமில்லாத திட்டத்தை அறிவிக்கமாட்டேன் உங்க பிள்ளை விஜய் என்று சொன்ன விஜய், பயிர் கடன் தள்ளுபடியில் ஒட்டுமொத்தமாக விவசாயிகளை போராட்ட களத்தில் தள்ளி இருக்கிறார் .
இந்த பட்ஜெட்டிலும் அறிவிப்புகள் மக்களின் நம்பிக்கை நிறைவேற்றுவதாக இருக்குமா? அல்லது திருப்பதிக்கு மொட்டை போட்டது போல மக்களுக்கு ஏமாற்றத்தை தருவது போல இருக்குமா?ஏனென்றால் முதல் கோணல் முற்றிலும் கோணல் முதல்வராக விஜய் பதவி ஏற்ற முதல் கையெழுத்து பயிர் கடன் தள்ளுபடி ஆனால் விவசாயிகளை இன்றைக்கு வீதியிலே நிறுத்தி இருக்கிறார் முதல்வர் விஜய்
இளைஞர்களுக்கு உள்ளூரில் வேலை வாய்ப்பு தரப்படும்,பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும், மகளிருக்கு மாதம் ரூபாய் 2500 தரப்படும், 100 காமராஜர் சிறப்பு பள்ளிகள் உருவாக்கப்படும், குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 6 விலையில்லாத சமையல் எரிவாயு தரப்படும் 29 வயதிற்கு மேல் வேலை தேடும் இளைஞர்களுக்கு மாதம் 4,000 ரூபாய் உதவி தொகை வழங்கப்படும், அங்கன்வாடி ஊழியர்களுக்கு சம்பளம் ரூபாய் 18 ஆயிரம் உயர்த்தி வழங்கப்படும், ஒப்பந்த ஆசிரியர்களுக்கு சம ஊதியம், பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும், போதை பொருள் நடமாட்டம் தடுக்க கடும் சட்டங்கள்,
அண்ணன் சீர்திட்டம், இளைஞர்களுக்கு பிணையில்லாமல் ரூபாய் 20 லட்சம் வரை கல்விக்கடன், இலவச போட்டி தேர்வுகள், இலவச ஆண்டு உடல் பரிசோதனை திட்டம்,
2 ஏக்கர் நிலமுளள விவசாயிகளின் பிள்ளைகளின் கல்வி செலவை அரசேஏற்கும் ,ஐந்து ஏக்கர் நிலம் உள்ள விவசாயிகளின் பயிர் கடனை முற்றிலும் ரத்து செய்வோம் இதில் தான் விஜய் வைத்த டுவிஸ்ட் ,தேர்தல் முன்பு 5 ஏக்கர் வைத்திருந்தால் பயிர் கடனை முற்றிலும் ரத்து செய்யப்படும் என்று கூறினார் பிறகு ஆட்சிக்கு வந்த பின் 50 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி 75 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி என்று கூறுகிறார் த.வெ.க அரசுக்கு ஏன் இந்த தடுமாற்றம் ?

கொடுத்த வாக்குதியைத்தானே இந்த தமிழ்நாடு மக்கள் எதிர்பார்க்கிறார்கள் சொல்வதை செய்வாரா? முதல்வர் விஜய் ,இல்லை எப்போதும் போல வசீகரமாக வசனத்தை பேசிவிட்டு நான் என்ன செய்ய முடியும் நிதி நிலைமை இப்படி இருக்கிறதே என்று ஆறுதல் தெரிவிப்பாரா?
நிதி நிலையை பற்றி இன்றைக்கு நாட்டு மக்களுக்கு நன்றாக தெரிந்திருந்தும், தேர்தல் வாக்குறுதியை வாரி வழங்கிய விஜய் இப்போது தமிழ்நாட்டு மக்களுக்கு த.வெ.க.அரசின் முதல் பட்ஜெட்டில் மகிழ்ச்சிகரமான பட்ஜெட்டாக அமையுமா! முன்னேற்றத்திற்கான பட்ஜெட்டாக அமையுமா? அல்லது பழனிக்கு மொட்டை போட்டதை போல மொட்டை பட்ஜெட்டாக த.வெ.க அரசின் பட்ஜெட் வெளிவருமா பொறுத்திருந்து பார்ப்போம் சொன்னதை செய்வாரா?
விஜய் இல்லை கடன் அளவை சொல்லி மக்களுக்கு பட்டை நாமத்தை போடாமல் இருந்தால் சரிதான் என கூறினார்




