• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

சிவகாசியில் அதிமுகவில் இணைந்த மாற்றுக்கட்சி நிர்வாகிகள்!





சிவகாசி மாநகராட்சி 20வது வார்டு பகுதியை சேர்ந்த மாற்றுக்கட்சி நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டோர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்தான் உண்மையான மக்கள் இயக்கம் என்ற நிதர்சனம் அறிந்து, முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி முன்னிலையில் அஇஅதிமுகவில் இணைந்தனர்…

இந்நிகழ்வின்போது, கழக எம்.ஜி.ஆர் இளைஞரணி துணைச்செயலாளரும், முன்னாள் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான ராஜவர்மன், திருத்தங்கல் முன்னாள் நகர கழக செயலாளர் சரவணக்குமார், விருதுநகர் மாவட்ட மாணவரணி இணைச்செயலாளரும், சிவகாசி மாநகராட்சி 9 வார்டு வட்ட செயலாளருமான வசந்தகுமார் மற்றும் கழக நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர்.