ஏர் இந்தியா நிறுவனத்தின் கீழ் இயங்கி வந்த அலையன்ஸ் ஏர் விமானநிறுவனம் இனிமேல் மத்திய அரசின் கீழ் தனிவர்த்தக நிறுவனமாக செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1996ம் ஆண்டு அலையன்ஸ் ஏர் நிறுவனம் தொடங்கப்பட்டாலும், ஏர் இந்தியா கட்டுப்பாட்டில் இயங்கி வந்தது. அதன்பின் ஏர் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. இந்நிலையில் நஷ்டத்தில் இயங்கிய ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா அன்சன்ஸ் வாங்கியத்தைத் தொடர்ந்து அலையன்ஸ் ஏர் விமானநிறுவனம் தனியாகப் பிரிந்தது. இதையடுத்து, மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் தனி வர்த்தக நிறுவனமாக மாறியது. இதற்கான அறிவிப்பும் நேற்று அதிகாரபூர்வமாக வெளியானது. இதன்படி “ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகளை மத்திய அரசு விற்பனை செய்தபின், அலையன்ஸ் ஏர் நிறுவனம் அதிலிருந்து பிரிந்துவிட்டது. 2022, ஏப்ரல் 15ம் தேதி முதல் அலையன்ஸ் ஏர் நிறுவனம் மத்தியஅரசின் கீழ் தனி வர்த்தக நிறுவனமாகச் செயல்படும்” எனத் தெரிவித்தார்.
அலையன்ஸ் ஏர் நிறுவனம் உள்நாட்டு விமானப் போக்குவரத்தில் மட்டும்தான் கவனம் செலுத்தி வருகிறது. தற்போது அந்த நிறுவனத்தின் கீழ் 19 விமானங்கள் உள்ளன, இதில் 18ஏடிஆர்-72, ட்ரோனியர்-228 ரக விமானங்கள் உள்ளன. ஏறக்குறைய 2-ம்நிலை, 3-ம் நிலை நகரங்களுக்கு 100 வழித்தடங்களில் அலையன்ஸ் ஏர் நிறுவனம் விமானத்தை இயக்கி வருகிறது,
கடந்த 2019-20ம் ஆண்டில் அலையன்ஸ் ஏர் நிகர லாபம் ரூ.65 கோடியாகும், வருவாய் ரூ.1,182 கோடியாகும். மத்திய அரசின் கீழ் இருக்கும் ஒரே விமான நிறுவனம் அலையன்ஸ் ஏர் மட்டும்தான். இனிமேல் தனிவர்த்தக நிறுவனமாகச் செயல்படும் அலையன்ஸ்ஏர் தனது டிக்கெட்டில் 9I(‘9I-XXX’) என்ற கோடில் விற்பனை செய்யும்.
இதுதொடர்பாக ஏர் இந்தியா நிறுவனம் நேற்று ட்விட்டரில் பதிவிட்டிருந்த செய்தியில் “ ஏர் இந்தியா டிக்கெட் வைத்திருக்கும் பயணிகள் கவனத்துக்கு. விமான எண் 9 அல்லது 3 எண் தொடங்கும் வகையில் 4 இலக்கத்தில் இருந்தால், அது ஏர் இந்தியாவுக்கானது அல்லது. அது அலையன்ஸ் ஏர் நிறுவனத்துக்குச் சொந்தமானது. அங்கு இந்த டிக்கெட் விவரங்களைக் கூறி தகவல் பெறவும்” எனத் தெரிவித்துள்ளது.

- நலம் விசாரித்த அனைவருக்கும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் நன்றிமருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் விஜயகாந்த் தன்னை நலம் விசாரித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு […]
- புரோட்டா கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள்மதுரையில் உள்ள பிரபல பன் புரோட்டா கடைக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.மதுரை மாவட்டம் […]
- மதுரையில் வணிகவரித்துறை அமைச்சரைக் கண்டித்து..,
அரசு ஊழியர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்..,மதுரையில் வணிகவரித்துறை அமைச்சரை கண்டித்து 200க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது […] - விவசாயப் பொருட்களை மதிப்புக் கூட்டி சந்தைப்படுத்த நடவடிக்கை ” அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்பாரம்பரிய நெல் வகைகளை சந்தைப்படுத்தலில் எனக்கே சவால்கள் உள்ளதாகவும், விவசாயப் பொருட்களை மதிப்புக் கூட்டி சந்தைப்படுத்த […]
- அதிமுக தற்போது டெல்லியின் அடமான திமுகவாக உள்ளது -கி.வீரமணிமதுரை ஆதினமாக போன்றோர் ஆதினமாக உலவ காரணம் திராவிடம் தான், அதிமுக அம்மாவின் கொள்கையவே மறந்து […]
- மும்பையிலும் 144 தடை உத்தரவு அமல்..மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் இன்று முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுவதாக வெளியானது. இந்நிலையில் மகாராஷ்டிர […]
- ஓபிஎஸ்-ஐ அவமரியாதை செய்ய எந்த உள்நோக்கமும் இல்லை- ஜெயகுமார்ஓபிஎஸ்-ஐ அவமரியாதை செய்ய வேண்டும் என்ற உள்நோக்கம் யாருக்கும் கிடையாது என ஜெயகுமார் தெரிவித்தார். அதிமுக […]
- ஜூலை 11ல் அ.தி.மு.க பொதுக்குழு என்பது கனவு மட்டுமேஅதிமுகவின் பொதுக்குழு ஜூலை 11ல் கூடுவது என்பது கனவாக மட்டுமே இருக்கும் என அதிமுக செய்தி […]
- 27-ந்தேதி காங்கிரஸ் போராட்டம்: கே.எஸ்.அழகிரி அறிவிப்புதமிழகம் முழவதும் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக காங்கிரஸ் வரும் 27ம் தேதி போராட்டம்தமிழக காங்கிரஸ் தலைவர் […]
- கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ1000 வழங்க சிறப்புமுகாம்கலைக்கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்க சிறப்பு முகாம்அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் […]
- 2 மாநிலமாக பிரித்து தமிழகத்தை கைப்பற்ற பாஜக புதியதிட்டம்தமிழகம் 2 மாநிலமாக பிரிக்கப்படுமா என பரபரப்பு தகவல் வெளியாகியிருக்கிறது.2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. […]
- இளைஞர்கள் விடும் கண்ணீர் மோடியின் கர்வத்தை உடைக்கும்!இந்திய இளைஞர்களின் கண்ணீரில் இருந்து வரும் நிராகரிப்பு உணர்வு பிரதமர் நரேந்திர மோடியின் கர்வத்தை உடைக்கும்” […]
- இனி சினிமா, டிவி நிகழ்ச்சிகளில் குழந்தைகள் நடிக்கத் தடை..,
தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் அதிரடி..!குழந்தைகளின் எதிர்கால நலன் கருதி, இனி சினிமா, டிவி நிகழ்ச்சிகளில் மூன்று மாதத்திற்கு உட்பட்ட குழந்தைகளை […] - நித்தியானந்தாவின் அடுத்த அதகளம் ஆரம்பம்..!லு’ இந்த நகைச்சுவைக் காட்சியை எளிதில் யாரும் மறந்திருக்க மாட்டார்கள். இந்த நகைச்சுவையைப் போலவே, சர்ச்சையின் […]
- ஊட்டியில் புலி நடமாட்டத்தைக் கண்காணிக்க..,
மரங்களில் கேமராக்கள் பொருத்தும் பணி..உதகையில் உள்ள மார்லிமந்து அணைப் பகுதியில் உலா வரும் புலியின் நடமாட்டத்தை கண்காணிக்க கண்காணிப்பு கேமராக்கள் […]