ஏர் இந்தியா நிறுவனத்தின் கீழ் இயங்கி வந்த அலையன்ஸ் ஏர் விமானநிறுவனம் இனிமேல் மத்திய அரசின் கீழ் தனிவர்த்தக நிறுவனமாக செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1996ம் ஆண்டு அலையன்ஸ் ஏர் நிறுவனம் தொடங்கப்பட்டாலும், ஏர் இந்தியா கட்டுப்பாட்டில் இயங்கி வந்தது. அதன்பின் ஏர் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. இந்நிலையில் நஷ்டத்தில் இயங்கிய ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா அன்சன்ஸ் வாங்கியத்தைத் தொடர்ந்து அலையன்ஸ் ஏர் விமானநிறுவனம் தனியாகப் பிரிந்தது. இதையடுத்து, மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் தனி வர்த்தக நிறுவனமாக மாறியது. இதற்கான அறிவிப்பும் நேற்று அதிகாரபூர்வமாக வெளியானது. இதன்படி “ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகளை மத்திய அரசு விற்பனை செய்தபின், அலையன்ஸ் ஏர் நிறுவனம் அதிலிருந்து பிரிந்துவிட்டது. 2022, ஏப்ரல் 15ம் தேதி முதல் அலையன்ஸ் ஏர் நிறுவனம் மத்தியஅரசின் கீழ் தனி வர்த்தக நிறுவனமாகச் செயல்படும்” எனத் தெரிவித்தார்.
அலையன்ஸ் ஏர் நிறுவனம் உள்நாட்டு விமானப் போக்குவரத்தில் மட்டும்தான் கவனம் செலுத்தி வருகிறது. தற்போது அந்த நிறுவனத்தின் கீழ் 19 விமானங்கள் உள்ளன, இதில் 18ஏடிஆர்-72, ட்ரோனியர்-228 ரக விமானங்கள் உள்ளன. ஏறக்குறைய 2-ம்நிலை, 3-ம் நிலை நகரங்களுக்கு 100 வழித்தடங்களில் அலையன்ஸ் ஏர் நிறுவனம் விமானத்தை இயக்கி வருகிறது,
கடந்த 2019-20ம் ஆண்டில் அலையன்ஸ் ஏர் நிகர லாபம் ரூ.65 கோடியாகும், வருவாய் ரூ.1,182 கோடியாகும். மத்திய அரசின் கீழ் இருக்கும் ஒரே விமான நிறுவனம் அலையன்ஸ் ஏர் மட்டும்தான். இனிமேல் தனிவர்த்தக நிறுவனமாகச் செயல்படும் அலையன்ஸ்ஏர் தனது டிக்கெட்டில் 9I(‘9I-XXX’) என்ற கோடில் விற்பனை செய்யும்.
இதுதொடர்பாக ஏர் இந்தியா நிறுவனம் நேற்று ட்விட்டரில் பதிவிட்டிருந்த செய்தியில் “ ஏர் இந்தியா டிக்கெட் வைத்திருக்கும் பயணிகள் கவனத்துக்கு. விமான எண் 9 அல்லது 3 எண் தொடங்கும் வகையில் 4 இலக்கத்தில் இருந்தால், அது ஏர் இந்தியாவுக்கானது அல்லது. அது அலையன்ஸ் ஏர் நிறுவனத்துக்குச் சொந்தமானது. அங்கு இந்த டிக்கெட் விவரங்களைக் கூறி தகவல் பெறவும்” எனத் தெரிவித்துள்ளது.

- மேயர், ஆணையாளரின் உருவப்பொம்மைக்கு சால்வை அணிவித்து வரவேற்ற பெண் கவுன்சிலர்மதுரை மாநகராட்சி 20ஆவது வார்டு பகுதியில் மேயர் ஆணையாளரின் உருவப்பொம்மைகள் ஆய்வு மேற்கொண்டதால் பரபரப்பு – […]
- சதுரகிரிமலையில் பக்தர்கள் கூட்டம் குவிந்தது..விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சதுரகிரிமலை […]
- கோகுல்ராஜ் கொலை வழக்கு..யுவராஜூக்கு சாகும் வரை ஆயுள்ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி மாணவர் கோகுல்ராஜ் தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் […]
- ஜூன் 9ல் தமிழகத்தின் அனைத்து பள்ளிகளிலும் மேலாண்மைகுழு கூட்டம்..!தமிழ்நாடு முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் வரும் 9ஆம் தேதி பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடத்த […]
- போக்குவரத்து விதிமீறல்களை கண்டுபிடிக்க நவீன வாகனம் அறிமுகம்..!
- பிளஸ் 2 முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை..!டெல்லி வளர்ச்சி ஆணையம் ஆனது பல்வேறு பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. […]
- தென்காசி அருகே பிட்பாக்கெட் அடித்த மூதாட்டி கைதுதென்காசி மாவட்டம் புளியங்குடி பஸ் நிலையத்தில் பிட்பாக்கெட் அடித்த மூதாட்டியை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.புளியங்குடியில் இருந்து […]
- கருணாநிதியின் நூற்றாண்டு விழா இலச்சினை வெளியீடுகலைவாணர் அரங்கில் நடைபெறும், நிகழ்ச்சியில் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா இலச்சினையை மேற்கு வங்க மாநில […]
- நீங்கள் எப்போதும் ராஜாதான்..! ” – முதலமைச்சர் வாழ்த்துஎங்கள் இதயங்களில் நீங்கள் எப்போதும் இராஜாதான்! வாழ்க நூறாண்டுகள் கடந்து!” – முதல்வர் ஸ்டாலின் இளையராஜவுக்குபிறந்த […]
- ஆசிரியர்களுக்கு குட்நியூஸ் சொன்ன சென்னை உயர்நீதிமன்றம்..!தமிழகத்தில் ஆசிரியர்களுக்கு இனி தகுதி தேர்வு கட்டாயம் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 178: ஆடு அமை ஆக்கம் ஐது பிசைந்தன்னதோடு அமை தூவித் தடந் தாள் […]
- பொது அறிவு வினா விடைகள்
- குறள் 445சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்சூழ்வாரைக் சூழ்ந்து கொளல்பொருள் (மு.வ):தக்க வழிகளை ஆராய்ந்து கூறும் அறிஞரையே உலகம் […]
- கோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் தமிழக மாணவர்கள் சாதனைகோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் தமிழக மணவர்கள் பதக்கங்களை வென்றுள்ளனர்.உலக பாரம்பரிய சோடோ […]
- திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவிலில் நேற்று ஒரே நாளில் 70 திருமணங்கள்திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவிலில் நேற்று ஒரே நாளில் 70 திருமணங்கள் நடைபெற்றது ‘திருமண […]