மறைந்த திரைப்பட இயக்குநரும், பாடலாசிரியருமான எம்.ஜி.வல்லபனின் பேத்தியான ஆதிரா பிரகாஷின் நடன அரங்கேற்றம் சென்னை வாணி மஹாலில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் நடிகை ரேகா கலந்து கொண்டு ஆதிராவை வாழ்த்திப் பேசினார்.அப்போது அவர் பேசும்போது, “இந்தக் கொரோனா காலகட்டத்தில் வெளியே செல்லாதீர்கள் என்று ரொம்பவே பயமுறுத்துகிறார்கள். நானும் வெளியில் செல்லாமல்தான் இருந்தேன். அப்படிப்பட்ட சூழலில் இங்கே வந்ததற்காக நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்; பெருமைப்படுகிறேன்.
இந்த அரங்கம் முழுமையாக நிரம்பி இருக்க வேண்டும். இந்தக் கொடிய தொற்றுக் காலத்தில் இவ்வளவு பேர் வந்திருந்ததில் மகிழ்ச்சி. நான் பரத நாட்டிய நிகழ்ச்சிகள் உட்பட நிறைய நிகழ்ச்சிகளுக்குச் சென்றிருக்கிறேன்.
நீங்கள் நீண்ட நேரம் சிரித்துக் கொண்டிருந்தால் பார்க்க அழகாக இருக்காது. ஆனால் அவள் ஆரம்பத்திலிருந்து கடைசிவரை புன்னகை புரிந்து கொண்டே இந்த நடனத்தை ஆடினாள். கொஞ்சம் கூட அவளது ஆற்றலின் அளவு குறையவில்லை.அப்படிச் சிரித்துக் கொண்டே ஆடிய நடனம் அவ்வளவு அருமையாக இருந்தது. அதை நான் மிகவும் ரசித்துப் பார்த்தேன்.ரசிக்க ரசிக்கத்தான் கலைஞர்கள் வளர்வார்கள். நாம் வளர வேண்டுமென்றால் நம்மை யாராவது ஊக்கப்படுத்தி, தூண்டுதலாக இருக்க வேண்டும்
துளிக்கூட பதற்றமில்லாமல் சலனமில்லாமல் சபையை கவர்ந்து கொண்டு முழு நம்பிக்கையுடன் அவள் ஆடிய நடனம் மிகப் பிரமாதம். இசைக் குழுவினரும் ஒரு துளியளவு கூட பிழை நேராமல் துல்லியமாகப் பாடி அவள் நடனத்தை உயர்த்திப் பிடித்தார்கள்.பெண்கள் ஏதாவது கலைகளைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று இங்கே ‘நர்த்தகி’ நடராஜ் அவர்கள் பேசினார்கள். நானும் கே.ஜே.சரசம்மாவிடம் நடனம் கற்றுக் கொள்ளப் போனேன். மூன்று, நான்கு மாதங்கள்தான் போயிருப்பேன்.
அலாரிப்பு’வரை போனேன். அதன் பிறகு ‘அரை மண்டியில் உட்கார்’ என்றார்கள். எங்கே ‘அரை மண்டி’யில் உட்கார்வது? அதற்குமேல் படங்களில் பிசியாகி விட்டேன். படங்களில் கிளிசரினைக் கொடுத்து அழுகை கதாநாயகியாகவே தொடர்ந்து நடிக்க வைத்து விட்டார்கள்.
பரத நாட்டியம் கற்றுக் கொள்ளும்போது நாம் ஒரு சிற்பமாக மாறிவிடுவோம். அதில் சிறு தவறு ஏற்பட்டாலும் எல்லாமே வீணாகிவிடும். நான் படங்களில் தொடர்ந்து நடித்ததால் ‘அலாரிப்பு’டன் என் நடனப் பயிற்சி முடிந்தது. அந்த நடனத்தைத் தொடர முடியவில்லை. நீண்ட நாள் கழித்து அந்தப் பழைய நினைவுகள் இப்போது எனக்கு வந்து விட்டன. நமக்குத் தட்டிக் கொடுக்கவும் ஊக்கப்படுத்தவும் யாராவது ஒருவர் உடன் இருந்து கொண்டே இருக்க வேண்டும்.
என் மகள் நியூயார்க்கில் படித்து முடித்துவிட்டு இப்போது வேலையில் சேர்ந்திருக்கிறாள். அங்கே மகளைத் தனியே விட்டுவிட்டு சுமார் ஒன்றரை ஆண்டுகளாக விசா கிடைக்காமல் நாங்கள் கணவன், மனைவி மட்டும் இங்கே தனியே இருப்பது வருத்தமாக உள்ளது.
சரி… ஒரு பதினைந்து நாள் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சிக்குப் போய்விட்டு வரலாம் என்று நினைத்தேன். ‘பிக்பாஸில்’ நடப்பது உண்மையா பொய்யா என்று தெரிந்து கொள்ளலாம் என்று ஒரு பதினைந்து நாள் போய்விட்டு வந்தேன். அது முடிந்தவுடன் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சிக்குப் போய்விட்டு வந்தேன்.
‘பிக்பாஸில்’ அந்த நூறு நாட்களும் சூழல்களைத் தூண்டிவிட்டு ஒரு பரபரப்பை உருவாக்குவார்கள். உதாரணமாக சனமாக இருக்கட்டும்; வேறு யாராகவும் இருக்கட்டும். “நான்தான் சமைக்கிறேன் என்று சொன்னேனே…?” என்று சண்டை போடுவதுவரை பாருங்கள். அதுதான் மக்களுக்குப் பிடிக்கிறது. எனவேதான் சண்டை போடும் சூழ்நிலைகளை அங்கே உருவாக்குகிறார்கள். அடிக்கடி சண்டைகள் நடக்கும். வெள்ளிக்கிழமை மீண்டும் சேர்ந்து கொள்வார்கள். சனி, ஞாயிறு மாறி விடுவார்கள். இப்படியே போய்க் கொண்டிருக்கும்.‘பிக் பாஸ்’ மூலம் ஒரு நூறு நாட்கள்தான் பிரபலமாக இருக்க முடியும். ‘பிக் பாஸ்’ மூலம் யாரும் ஸ்டார் ஆக முடியாது. ஆனால், வாழ்க்கையில் நிறைய கற்றுக் கொள்ளலாம். அங்கே போன் கிடையாது, பேப்பர் கிடையாது, யாரும் சொல்லிக் கொடுப்பதில்லை. இந்த நிலையில் பொறுமையாக இருந்துதான் நம்மை யார் என்று காண்பிக்க வேண்டும். நான் அங்கேயிருந்த 15 நாட்களும் பொறுமையாகத்தான் இருந்தேன்.எதையாவது சாதித்த பிறகுதான் மிகவும் அர்ப்பணிப்புடன், பொறுமையாக இருக்க வேண்டும் என்று நான் அடிக்கடி சொல்வேன். நான் நடித்த படங்களில் எல்லாம் படப்பிடிப்புகளுக்குச் சரியான நேரத்தில் சென்று, பொறுமையாக இருந்ததால்தான் இதை என்னால் செய்ய முடிந்தது. பொறாமை எண்ணங்களோ, கர்வமோ நமக்குள் இருக்கக் கூடாது.
‘நான் இவ்வளவு பெரிய ஆள், நான் ஏன் 17 பேருக்குச் சமைத்துக் கொடுக்க வேண்டும்?’ என்றெல்லாம் நினைக்கக் கூடாது. அதையெல்லாம் நான் நினைக்காமல் அந்த வாழ்க்கையை உற்று நோக்கிப் பார்த்தேன்.நாம் எப்போதும் சும்மா இருக்கக் கூடாது இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும்.
அது போல எப்போதும் நம்முடைய நம்பிக்கையைக் கைவிடக் கூடாது. கண்ணாடியில் பார்த்து நம்முடைய அழகையும் பராமரிக்க வேண்டும். அதுதான் நமது பலம். எப்போதும் என்னை நான் இளமையாகவே உணர்வேன்.பெற்றவர்கள் எந்த ஒரு விஷயத்தையும் பிள்ளைகளிடம் தாங்கள் இஷ்டப்பட்டதைத் திணிக்கக் கூடாது. பிள்ளைகளிடம் தானாகக் கற்றுக் கொள்ள விருப்பம் வர வேண்டும். ஆதிராவின் பெற்றோர்கள் அவளை நன்றாக ஊக்கப்படுத்தி இருக்கிறார்கள். அவர்களுக்கு எனது பாராட்டுக்கள்.. என்று கூறி வாழ்த்தினார்.
- தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார் பிரதமர் மோடி…ஹைதராபாத்திலிருந்து தனி விமானம் மூலமாக பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்தடைந்தார். அவரை அமைச்சர் துரைமுருகன், […]
- வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் ரூ.35.000 சம்பளத்தில் 26 காலிப்பணியிடங்கள் ..தென்னிந்திய பல மாநில விவசாய கூட்டுறவு சங்கம் (SIMCO) வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் […]
- சென்னைக்கு ஒரு நாள் பயணம்… நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பு…பிரதமர் மோடி இன்று ஒரு நாள் பயணமாக சென்னை வருகிறார். சென்னையில் உள்ள நேரு உள் […]
- ஸ்மார்ட்போன் டேட்டா பயன்பாட்டில் இந்தியா முதலிடத்தில் உள்ளது- பிரதமர் மோடி பெருமிதம்உலகின் அளவில் ஸ்மார்ட் போன் டேட்டா பயன்பாட்டில்இந்தியா முதலிடத்தில் உள்ளது- பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.ஐதராபாத்தில் […]
- ஜூன் 23ம் தேதி இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் தகவல்காலியாக உள்ள நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 23ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என […]
- மதுரை மேயரை முற்றுகையிட்ட பொதுமக்கள்!மதுரை துர்கா காலனியில் அடிப்படை வசதிகேட்டு மேயர் காரை முற்றுகையிட்ட பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது.மதுரை 97 […]
- டிகிரி முடித்தவரா நீங்கள்? தேசிய அனல்மின் நிறுவனத்தில் வேலை ரெடிதேசிய அனல் மின் நிறுவனம் (NTPC Limited ) இந்தியாவில் உள்ள மிக பெரிய அரசுக்கு […]
- 12 ஆண்டுக்கு பின் இன்று மேற்கே திரும்பும் கிழக்கே போன ரயில்போடி ரயில் பாதையை அகல ரயில் பாதையாக மாற்ற ,கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு கிழக்கே […]
- எலிசபெத் ராணியின் நினைவாக மிகப் பெரிய தங்க நாணயம் வெளியீடு…பிரிட்டன் எலிசபெத் மகாராணி முடிசூட்டப்பட்டு 70 ஆண்டுகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. பிரிட்டன் நாட்டில் எலிசபெத் ராணி […]
- நடிகர் போண்டாமணிக்கு திடீர் உடல்நலக்குறைவு…பிரபல நகைச்சுவை நடிகர் போண்டாமணி திடீர் உடல்நலக்குறைவு காரணமாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். […]
- மதுரையில் மாநில அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்மாநில அரசை கண்டித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய மாநில அரசு மற்றும் பொதுத்துறை சங்கங்களின் […]
- நவம்பர் 1 ஆம் தேதி மீண்டும் உள்ளாட்சி தினமாக கொண்டாடப்படும்…தமிழகத்தில் நவம்பர் 1 ஆம் தேதி மீண்டும் உள்ளாட்சி தினமாக கொண்டாடப்படும் என அறிவித்த தமிழக […]
- பள்ளி மாற்றுச்சான்றிதழில் தாய்மொழி – சீமான் பெருமிதம்நாம் தமிழர் கட்சி மேற்கொண்ட தொடர் முயற்சியின் விளைவாக இனி பள்ளி மாற்றுச்சான்றிதழில் தாய்மொழி குறித்த […]
- மதுரை ஆவினில் முறைகேடு- 30 பேரிடம் விசாரணைஆவினில் நடந்த முறைகேடுகள் குறித்து 30 பேரிடம் நேரில் அழைத்து விசாரணை செய்யப்பட்டுள்ளது.மதுரை ஆவினில் கடந்த […]
- உலக முழுவதும் வேகமாக பரவி வரும் குரங்கு அம்மைஉலகம் முழுவதும் 215 பேர் குரங்கம்மை வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதாரஅமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.கொரோனா தொற்று […]