ரெயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்தவரை போலீஸ் அதிகாரி காலால் மிதித்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
கேரள மாநிலம் கண்ணூரில் இருந்து திருவனந்தபுரத்துக்கு மாவேலி என்ற எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் நேற்று அதிகாலை 5 மணிக்கு கண்ணூரில் இருந்து திருவனந்தபுரத்தை நோக்கி புறப்பட்டது. அந்த ரெயில் வடகரா ரெயில் நிலையத்தை தாண்டிச் சென்று கொண்டு இருந்த போது அந்த ரெயிலில் உள்ள முன்பதிவு செய்யும் பெட்டியில் பயணித்த கண்ணூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரமோத், திடீரென்று அந்த ரெயிலில் பயணித்த பயணிகளிடம் டிக்கெட் பரிசோதனை செய்ததாக தெரிகிறது.
அப்போது 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் டிக்கெட் எடுக்காமல் பயணித்தது தெரியவந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த இன்ஸ்பெக்டர் அந்த நபரை கீழே தள்ளிவிட்டு தனது ஷ_ காலுடன் அவருடைய நெஞ்சில் சரமாரியாக மிதித்தார். இதை பார்த்து அந்த பெட்டியில் பயணித்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் ஓடி சென்று போலீஸ் இன்ஸ்பெக்டரை தடுத்தனர். இருந்தபோதிலும் அவர் அதை பொருட்படுத்தாமல் அந்த நபரை தொடர்ந்து மிதித்துக்கொண்டே இருந்தார்.
இந்த சம்பவத்தை அதே பெட்டியில் பயணித்த நபர் ஒருவர், தனது செல்போனில் வீடியோ எடுத்து, அதை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த சம்பவத்துக்கு பலர் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
மேலும் சிலர் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு ரெயிலில் டிக்கெட் பரிசோதிக்க அதிகாரம் இல்லை என்றும், இன்ஸ்பெக்டர் தனது அதிகாரத்தை மீறி இதுபோன்ற செயலில் ஈடுபட்டதால் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டு உள்ளனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த கண்ணூர் போலீஸ் கமிஷனர் இளங்கோ உத்தரவிட்டு உள்ளார். அத்துடன் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் விளக்கம் கேட்கப்படும் என்றும், தவறு இருந்தால் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கமிஷனர் உறுதியளித்து உள்ளார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், சமீபகாலமாக போலீசார் மீது புகார்கள் அதிகளவில் வந்து கொண்டு இருக்கிறது. எனவே உடனடியாக போலீஸ் உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடத்தப்படும் என்றார்.
- பாஜகவில் மீண்டும் இணைந்த மைத்ரேயன்அதிமுக கட்சியின் முன்னாள் மாநிலங்களைவை உறுப்பினர் மைத்ரேயன், பாஜக கட்சியில் தன்னை மீண்டும் இணைத்துக் கொண்டார்.மைத்ரேயன் […]
- ஜப்பான் சென்ற முதல்வர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி திரட்டி இருந்தால் பாராட்டியிருக்கலாம் – பாஜக பொதுச்செயலாளர் பேட்டிமதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து செங்கலை காட்டி விமர்சனம் செய்த ஸ்டாலின் ஜப்பானில் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக […]
- தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் குழந்தை பாம்புகடித்து பலிதிருமங்கலம் அருகே ஓடும் பேருந்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட பணித்தள பொறுப்பாளரின் 4 […]
- தமிழ்நாடு – கர்நாடக தேசிய நெடுஞ்சாலையில் வழிமறித்த காட்டு யானைதமிழ்நாடு – கர்நாடக தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் சாலையை வழிமறித்த ஒற்றை ஆண் […]
- ரோடா இது ?புதிய தரமற்ற சாலை அமைத்த அதிகாரியை கண்டித்த மதுரை ஆட்சியர் சங்கீதாரோடா இது என் வண்டி வந்தாலே ரோடு தாங்காது 1.10 கோடியில் புதிய தரமற்ற சாலை […]
- மாதாந்திர உதவித் தொகை வழங்க கோரி மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் சார்பாக மனுதமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பர் உரிமை சங்கத்தின் சார்பாக இன்று மதுரை மாவட்ட […]
- மதுரையில் பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளை கௌரவிக்கும் நிகழ்ச்சி.!!சேலத்தை தலைமையிடமாக கொண்ட விநாயகா மிஷன் ஆராய்ச்சி நிறுவனம் நடத்தும் பிளஸ் டூ பொதுத்தேர்வில் முதல் […]
- ரயில் ஓட்டுநர்களுக்கு கடும் விதிகள்ரயில் ஓட்டுநர்களான லோகோ பைலட் பணி நேரத்தின்போது பாண் மசாலா, குட்கா போன்ற புகையிலைப் பொருட்களை […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் ஐஸ்வர்யம் ஐஸ்வர்யம் என்றால் பணக் கட்டுகளோ, லாக்கரில் இருக்கும் தங்கமோ அல்லவீட்டு வாசலில் பெண் […]
- இன்று காந்தவியல் கண்டுபிடிப்பாளர் ஆந்த்ரே-மாரி ஆம்பியர் நினைவு நாள்மின்சாரத்திற்கும் காந்தவியலுக்கும் உள்ள தொடர்பை நிலைநிறுத்திய ஆந்த்ரே-மாரி ஆம்பியர் நினைவு நாள் இன்று (ஜூன் 10, […]
- பொது அறிவு வினா விடைகள்
- அமைச்சர்.பி டி ஆர் தியாகராஜனின் தொகுதியில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடும் அவலம்மதுரையில் அமைச்சர்.பி டி ஆர் தியாகராஜனின் மத்திய தொகுதியில் குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடும் […]
- இன்று தொடர்வண்டிப் பாதையின் தந்தை ஜார்ஜ் ஸ்டீபென்சன் பிறந்த நாள்நீராவிப் பொறியைக் கண்டுபிடித்த தொடர்வண்டிப் பாதையின் தந்தை, இங்கிலாந்து எந்திரப்பொறியாளர் ஜார்ஜ் ஸ்டீபென்சன் பிறந்த நாள் […]
- வாட்ஸ்அப்-க்கும் வந்தாச்சு ஸ்க்ரீன் ஷேரிங் அம்சம்!வாட்ஸ்அப் செயலியில் விரைவில் ஸ்கிரீன் ஷேரிங் அம்சத்தை (Feature) கொண்டுவர மெட்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. உலகில் […]
- குறள் 450பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தேநல்லார் தொடர்கை விடல்.பொருள் (மு.வ):நல்லவராகிய பெரியாரின் தொடர்பைக் கைவிடுதல் பலருடைய பகையைத் […]