தேனி மாவட்டம் கடமலை மயிலை ஒன்றியம் தங்கம்மாள்புரம் கிராமத்தில் பாலா முதலாம் ஆண்டு நினைவு சார்பில் மாநில அளவிலான கபடி போட்டி நடந்தது. இதில் மதுரை, தேனி, திண்டுக்கல், கம்பம் , கோட்டூர், மேலப்பட்டி, பாலூத்து, மதுரை, விருதுநகர், முத்தாலம்பாறை, கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, வருஷநாடு, கண்டமனூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான கபடி வீரர்கள் கலந்து கொண்டனர்.
போட்டியில் வெற்றி பெற்ற அணி வீரர்களுக்கு முதல், இரண்டாம், மூன்றாம் மற்றும் நான்காம் பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பாலா நினைவு கபடிகுழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.