உறைபனியாக காட்சியளிக்கும் அண்டார்டிக்காவில் ஓணம் பண்டிகை கொணட்டாப்பட்ட வீடியோ வைரலாகிவருகிறது.
கடந்த செப்.8ம் தேதி ஓணம் பண்டிகை கேரளா மற்றம் தமிழகத்தின் சில பகுதிகளில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. வெளிநாடுகளிலும் கூட ஓணம் கொண்டாட்டங்கள் களைகட்டியது. இந்த நிலையில் மனிதர்கள் பெருமளவில் வாழாத அண்டார்டிகாவில் உறைய வைக்கும் குளிரில் சிலர் ஓணம் பண்டிகை கொண்டாடிய வீடியோவை ஆனந்த் மகேந்திரா பகிர்ந்துள்ளார்.அத்துடன் அண்டார்டிகாவாக இருந்தாலும் இந்தியர்களின் ஓணம் கொண்டாட்டத்தை தடுக்கமுடியாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.