• Wed. Aug 12th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

சமையல் குறிப்புகள்:

Byவிஷா

Sep 19, 2022

நெய் சாதம்

தேவையான பொருட்கள்
பாசுமதி அரிசி – 1 கோப்பை (200 கிராம்), நெய் – 100 கிராம், பிரியாணி இலை – 1, பட்டை – 6 துண்டுகள் (சிறியது), கிராம்பு – 6, ஏலக்காய் – 2, பூண்டு – 7 பல், கறிவேப்பிலை – ஒரு கொத்து

செய்முறை:

அரிசியை 10 நிமிடம் ஊற வைத்து கழுவி வடித்து கொள்ளவும். பூண்டை தோல் உரித்து தட்டிக் கொள்ளவும். ஏலக்காயை லேசாக தட்டிக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து நெய் ஊற்றி காய்ந்ததும், ஏலக்காய், பட்டை, கிராம்பு, கறிவேப்பிலை, சேர்த்து தாளிக்கவும். பிறகு முந்திரி சேர்க்கவும். வடிகட்டிய அரிசியை அடுப்பில் உள்ள நெய்யில் போட்டு கிளறவும். இதனுடன் ஒரு பங்கு அரிசிக்கு 2 1ஃ4 பங்கு சுடு தண்ணீர் சேர்க்கவும்.  தேவையான அளவு உப்பு சேர்த்து, அதிகம் கிளறாமல் மெல்லிய தணலில் வேகவிடவும்.  சாதம் குழையும் முன் இறக்கி வைக்கவும்.