• Sun. Sep 6th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

ஆடிப்பூரத்தை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்

ByA.Tamilselvan

Jul 31, 2022

அருள்மிகு மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் நேற்று ஆடி முளைக்கட்டு உற்சவ விழாதுவங்கியது . திருப்பரங்குன்றத்தில்அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் ஆடிபூரத்தை முன்னிட்டு அம்மனுக்குசிறப்பு அலங்காரம் நடைபெற்றது.
நேற்று ஆடிப்பூரத்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.ஆடிப்பட்டம் தேடி விதை என்ற முன்னோர்களின் வாக்கின்படி, ஆடி மாதம் விதை விதைத்து நாற்று நட்டு விவசாய பணிகளை மேற்கொள்ளவும், தங்கள் நிலங்களில் பயிர் விளைச்சல் அதிகரிக்க வேண்டியும் இறைவனை வழிபாடு செய்வது வழக்கம். இந்த ஆண்டு ஆடி முளைக்கொட்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இந்நிலையில் திருப்பரங்குன்றத்தில்அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு கோரத்தாம்பிகை ஆவுடைய நாயகி அம்மன்சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி புறப்பாடு தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கு அருள் பாலித்த காட்சி