• Tue. Sep 8th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

சிறைவாசம் முடித்து வெளியே வந்த பேரறிவாளன்…

Byகாயத்ரி

Mar 15, 2022

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 வருடங்களுக்கு பிறகு பேரறிவாளன் ஜாமீனில் வெளியே வந்தார். சென்னை புழல் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த பேரறிவாளன் நன்றி கூறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். எனினும் முழுமையான விடுதலைக்காக தொடர்ந்து போராட்டம் மேற்கொள்வோம் என்று பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் பேட்டியளித்தார். மேலும் இது அரசியல் அரங்கில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது என்றும் அவர் கூறினார். 30 வருடங்களுக்கு பிறகு உச்சநீதிமன்றம் பிணை வழங்கியதை அடுத்து ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பேரறிவாளன் புழல் சிறையில் இருந்து வெளியே வந்து இருப்பது அவரது தாய் அற்புதம்மாளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.